நடத்தையில் சந்தேகம் - ஷூ லேசால் மனைவி கழுத்தை நெரித்து கொலை

 
d

திருமணமாகி 17 ஆண்டுகள் கணவன்- மனைவி ஒன்றாக குடித்தனம் நடத்தி வந்த நிலையில் தற்போது  மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால்  கழுத்தை இறுக்கி கொலை செய்திருக்கிறார் கணவர்.   ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடந்திருக்கிறது இந்த சம்பவம்.

r

அம் மாவட்டத்தில் நவல்பூர் தியாகி மாணிக்கம் பகுதியில் வசித்து வருபவர் சுலைமான்(வயது40) இவரது மனைவி மும்தாஜ்(வயது 39), இவர்களுக்கு திருமணம் ஆகி 17 ஆண்டுகள் ஆகின்றன.   திருமணம் ஆகி 17 ஆண்டுகள் ஆகியிருக்கும் இத்தம்பதிக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.  

 சுலைமான் அதே பகுதியில் இருக்கும் தனியார் கேஸ் ஏஜென்சியில் வேலை செய்து வருகிறார்.  இத்தனை வருட காலம் கணவன் -மனைவி ஒற்றுமையாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது மனைவி மும்தாஜ்  நடத்தையில் சுலைமானுக்கு சந்தேகம் வந்திருக்கிறது.   இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்திருக்கிறது .

su

இந்த நிலையில் சந்தேகத்தின் பேரில் நேற்று காலையில் தகராறில் ஈடுபட்டு இருக்கிறார் சுலைமான். அப்போது இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில் கடும் ஆத்திரமடைந்த சுலைமான் தனது ஷூ லேசால் மனைவி மும்தாஜ் கழுத்தை இறக்கி இருக்கிறார்.  இதில் அவர் துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார்.

 மனைவி உயிரிழந்ததை அறிந்ததும் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்திருக்கிறார்.   இதற்குள் போலீசாருக்கு தகவல் தெரிந்து சம்பவ இடத்திற்கு வந்து மும்தாஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இருக்கின்றனர்.   மனைவியை கொன்ற   சுலைமானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.