இளம்பெண் படுகொலையில் திமுக நிர்வாகி மகன் கைது

 
r

இளம் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் திமுக நிர்வாகி மகன் கைது செய்யப்பட்டுள்ளார். 

 திருவள்ளூர் மாவட்டத்தில் பெரியபாளையம் அருகே கன்னிகைப் பேர் கிராமம்.  இக்கிராமத்தின் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் திராவிட பாலு.  திமுக ஒன்றிய செயலாளர் ஆகவும் கன்னிகை பேர் ஊராட்சி மன்றத் தலைவராகவும் பதவி வகித்து வந்துள்ளார்.  சில ஆண்டுகளுக்கு முன்பு வெடிகுண்டு வீசி இவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

 இவரின் மனைவி செல்வி.  அவரின் மகன் முருகன்.  மருமகள் ரம்யா.  முருகனின் மகன் கருணாநிதி.  இவர்களுக்கும் திராவிட பாலுவின் தம்பி சத்தியவேலுவுக்கும் நிலப் பாகப்பிரிவினை தொடர்பாக பிரச்சனை இருந்து வந்திருக்கிறது.  சத்திய வேலு எல்லாபுரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளராக இருந்து வருகிறார். 

j

 நேற்று முன்தினம் இரவு சொத்து பிரச்சனை சம்பந்தமாக இரு குடும்பங்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.  இதில் ஆத்திரமடைந்த சத்திய வேலுவின் மகன் பவுன் குமார் என் விஷால் அருகில் கிடந்த இருப்பு கம்பியை எடுத்து பெரியப்பா குடும்பத்தைச் சேர்ந்த செல்வி, முருகன், ரம்யா, கருணாநிதி ஆகியோரே கண்மூடித்தனமாக தாக்கி விட்டு தப்பி இருக்கிறார்.

 இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த நாலு பேரும் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்திருக்கிறார்கள். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் இவர்கள் நாலு பேரையும் மீட்டு மஞ்சங்காரணையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.  டாக்டர்கள் தீவியை சிகிச்சை அளித்தும் ரம்யா  உயிரிழந்துள்ளார்.  செல்வி ,முருகன், கருணாநிதி ஆகியோருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 தகவல் அறிந்த பெரிய பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய விஷாலை கைது செய்து விசாரணை நடத்திய வருகின்றனர்.