குடும்பத்தகராறில் மாமியாரை குத்திக்கொன்ற மருமகன்

 
murder

கும்மிடிப்பூண்டி அருகே குடும்பத் தகராறில் மாமியாரை கத்தியால் குத்திக் கொலை செய்த மருமகன் கைது செய்யப்பட்டார்.

murder

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கல்யாணி (60). இவரது மகள் கஸ்தூரி, மருமகன் குப்பன் (47). இவர்கள் பெத்திக்குப்பம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர். குப்பனுக்கும் அவரது மனைவி கஸ்தூரிக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாகவும்வும், அதனால் கஸ்தூரி அருகாமையில் உள்ள தனது தாயார் கல்யாணியின் வீட்டிற்கு சென்று தங்கி விடுவதாகவும் கூறப்படுகிறது. இன்றும் வழக்கம் போல ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக தாயார் கல்யாணியின் வீட்டில் கஸ்தூரி இருந்துள்ளார். 

அப்போது அங்கு வந்த மருமகன் குப்பனுக்கும் மாமியார் கல்யாணிக்கும் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த குப்பன் கையில் இருந்த கத்தியை எடுத்து கல்யாணியை குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த கல்யாணியை, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரது மகள் கஸ்தூரி கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கல்யாணியின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த கும்மிடிப்பூண்டி போலீசார் மாமியாரை குத்தி கொலை செய்த மருமகன் குப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப தகராறில் மாமியாரை மருமகனே குத்தி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது