சொத்துக்காக மனைவியுடன் சேர்ந்து தாயை எரித்து கொன்ற மகன்

 
தாயை எரித்து கொன்ற மகன்

திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி செல்லும் சாலையில் பாத்திமா கோவில் அருகே கடந்த 29 ஆம் தேதி 70 வயது மூதாட்டி அரசம்மாள் எரிந்த நிலையில் சடலமாக மீட்க்கப்பட்ட விவகாரத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை கேடிசி நகரில் வீட்டில் உடல் கருகிய நிலையில் இறந்து கிடந்த மூதாட்டி எரித்து கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது .இது தொடர்பாக போலீசார் அவரது மகன் மற்றும் மருமகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பாளையங்கோட்டை கேடிசி நகர் மங்கம்மாள் சாலையை சேர்ந்தவர் சிவசுப்பு மனைவி அரசம்மாள்(70). இவரது மகன் அண்ணாமலை(48) ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். சிவசுப்பு சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார் .இதை அடுத்து அரசம்மாள் மகன் வீட்டில் வசித்து வந்தார். கடந்த சில நாட்களாக அரசம்மாவிற்கும் அவரது மருமகள் அனிதா விற்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது .அவர்களை அண்ணாமலை அவ்வப்போது சமாதானம் செய்து வைத்துள்ளார். இதை அடுத்து ஒரே வீட்டில் அரசம்மாள் தனியாக ஒரு அறையில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி அரசம்மாள் வாழ்ந்து வரும் வீட்டின் மாடிக்கு செல்லும் பகுதியில் இருந்து புகை மூட்டம் வெளியேறி உள்ளது.

இதை பார்த்து பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள் பாளையங்கோட்டை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு  வந்த பாளையங்கோட்டை தீயணைப்பு வீரர்கள் அங்கு தீயணைத்துவிட்டு பார்த்தபோது மூதாட்டி  அரசம்மாள் கறிக்கட்டையாக எரிந்து பிணமாக கிடந்தார். இது குறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் அரசம்மாளின் மகன் அண்ணாமலை மற்றும் அவரது மனைவி அனிதா ஆகியோர் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். அரசம்மாள் பேரில் வீடு இருக்கும் நிலையில் அவருக்கும் மகன் மற்றும் மருமகள் இடையே தொடர்ந்து சொத்து பிரச்சனை நிலவி வந்துள்ளது .சொத்தை தனது பெயருக்கு எழுதி வைக்க கோரி இருவரும்  அரசம்மாளிடம் தகராறு செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி சொத்து பிரச்சனை முற்றி அண்ணாமலை மற்றும் அவரது மனைவி அனிதா இருவரும் அரசம்மாளை பிடித்து தள்ளி உள்ளனர். இதில் நிலத்தடு மாறி விழுந்த அரசம்மாள் வீட்டுக்குள் பின்புறத்தில் இருந்த விறகு கட்டைகளுக்கு மத்தியில் வைத்து எரித்து விட்டனர்.இதில் அரசம்மாள் கருகிப் பிணமானது தெரியவந்தது. இதுகுறித்து பாளையங்கோட்டை தாலுகா போலீசார் விசாரணை நடத்தி கணவன் மனைவி இருவரையும் இன்று கைது செய்தனர்.