"ஆறாவதா நானும் உன்னை .".ஐந்து பேரால் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்ணுக்கு போலீசால் நேர்ந்த பரிதாபம் .
போலீஸ் அதிகாரி உள்பட ஆறு பேர் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்ததால் கைது செய்யப்பட்டுள்ளனர்
உத்தரபிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டத்தில் 13 வயது சிறுமியொருவர் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார் ,அந்த பெண்ணை கடந்த சில நாட்களுக்கு முன்பு நாலு பேர் கொண்ட வாலிபர் கூட்டம் கடத்தி சென்று பலாத்காரம் செய்து விட்டு ஓடி விட்டனர் .அதனால் அப்பெண் இது பற்றி புகாரளிக்க அங்குள்ள காவல் நிலையம் சென்றார் .அப்போது அங்கிருந்த போலீஸ் அதிகாரியிடம் தனக்கு நேர்ந்த கூட்டு பலாத்காரம் பற்றி கூறினார் .அதை கேட்ட அந்த போலிஸ் அதிகாரி அந்த பெண்ணுக்கு உதவி செய்வது போல் நடித்து அந்த பெண்ணை அவரும் ஆறாவது நபராக பலாத்காரம் செய்தார் .
பிறகு அப்பெண் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி சைல்டு லைன் ஹெல்ப்பில் கூறியதும் அவர்கள் அனைவரும் அந்த சிறுமியை அழைத்து சென்று உயரதிகாரிகளிடம் புகார் கூறினார் .பின்னர் அப்பெண்ணை கெடுத்த ஒரு போலிஸ் அதிகாரி உள்பட அனைவர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
இப்போது ஒரே ஒரு குற்றவாளி மட்டும் கைது செய்யப்பட்டுள்ளது என போலீசார் கூறினர்.அப்பென்னை குழந்தைகள் நலக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்
இப்போது பாலியல் பலாத்காரம் செய்ததாக எஸ் ஐ உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.