பெண் சடலங்களின் நிர்வாண வீடியோக்கள் - மருத்துவமனை ஊழியர் தலைமறைவு

 
bo

மருத்துவமனையின் பிணவறையில் வேலை செய்து வந்த அந்த ஊழியர் சையது உசேனின் செல்போனை போலீசார் ஆய்வு செய்ததில் அதிர்ச்சி அடைந்தனர் . அதில் பிணவறையில் உள்ள பெண் சடலங்களின் நிர்வாண உடல்களை வீடியோ எடுத்து வைத்திருந்திருக்கிறார்.  பிணவறையில் உள்ள பெண் சடலங்களுடன் உடலுறவு வைத்திருந்தார் என்றும், மருத்துவமனை பெண் ஊழியர்களை பிணவறைக்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்று குற்றச்சாட்டு உள்ள நிலையில் தலைமறைவாக இருக்கும் அந்த வாலிபரை கைது செய்ய போலீசார் தேடி வருகின்றனர்.

 கர்நாடகா மாநிலத்தில் குடகு மாவட்டத்தில் மடிகேரி என்கிற பகுதியில் இருக்கும் அந்த அரசு மருத்துவமனையில் கடகத்தாழ்வு என்கிற பகுதியைச் சேர்ந்த 30 வயது வாலிபர் சையத் உசேன் வேலை செய்து வந்திருக்கிறார்.  கடந்த 2021 ஆம் ஆண்டு தான் கொரோனா  முன் கள பணியாளராக வேலைக்கு சேர்ந்திருக்கிறார்.  

sy
பிணவறையின் உதவியாளராக இருந்த  இவர் மருத்துவமனையில் வேலை செய்யும் பெண்களிடம் ஆபாசமாக இரட்டை அர்த்தத்தில் பேசி வந்திருக்கிறார்.  சில பெண்களிடம் அத்து மீறி இருக்கிறார். மருத்துவமனை பெண் ஊழியர்களை பிணவறைக்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.  பிணவறையில் உள்ள பெண் சடலங்களுடன் உடலுறவு வைத்திருந்தார் என்றும், மருத்துவமனை பெண் ஊழியர்களை பிணவறைக்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் என்று இந்து அமைப்பினர் மருத்துவமனையின் முதல்வரிடம்  புகார் அளித்துள்ளனர்.

 இந்த நிலையில் மருத்துவமனையில் வேலை பார்த்து அவரும் ஒரு பெண் ஊழியரின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து இருக்கிறார்.  இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை பிடித்து தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்து இருக்கின்றனர்.   பின்னர் ஜாமீனில் வெளியே வந்திருக்கிறார்.  ஆனால் அந்த வாலிபரை கைது செய்த போது அவரிடம் இருந்த செல்போனை போலீசார் பறிமுதல் செய்திருந்தனர்.

 அந்த செல்போனை தற்போது ஆய்வு செய்த போது போலீஸ் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  மருத்துவமனையின் பிணவறையில் உள்ள பெண்களின் நிர்வாண உடல்களை வீடியோக்கள் எடுத்து வைத்திருந்திருக்கிறார்.   மருத்துவமனை பெண் ஊழியர்களிடம் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோக்களை வைத்திருந்திருக்கிறார்.  இதை அடுத்து அவரிடம் விசாரணை நடத்த அவரை தேடி வந்த போது,   இதை தெரிந்து கொண்ட சையத்  உசேன் தலைமுறைவாகிவிட்டார் .  தலைமறைவாக இருக்கும் அவரை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.