என் கணவரும் அவரது 3 நண்பர்களும் சேர்ந்து மாறி மாறி..கல்லூரி பேராசிரியை கதறல்

 
gg

நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை கூட்டு பாலியல் உணர்வு செய்துள்ளார் கணவர். வரதட்சணை பிரச்சனையால் கல்லூரி பேராசிரியைக்கு நடந்திருக்கிறது இந்த கொடூரம்.  

 உத்தரப்பிரதேச மாநிலத்தில் கான்பூர் சக்கேரி காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வரும் அந்த பெண் ஒரு கல்லூரி விரிவுரையாளர்.  அவர் தனது கணவன், மாமியார் மீது போலீசில் பரபரப்பு புகார் அளித்திருக்கிறார்.  

hh

 அந்த புகாரில் இதே பகுதியைச் சேர்ந்த இளைஞரை திருமணம் செய்து கொண்டதாகவும்,  கடந்த 2020ஆம் ஆண்டு தனக்கு திருமணம் நடந்தது என்றும்,  அன்று முதல் இன்று வரைக்கும் தாய் வீட்டில் இருந்து 2 லட்சம் ரூபாய் வரதட்சணை வாங்கி வரச் சொல்லி மாமியார் கொடுமைப்படுத்தி  வருவதாக சொல்லி இருக்கிறார்.

 தான் கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்தும் இரண்டு லட்ச ரூபாய் தனது குடும்பத்தாரால் கொடுக்க முடியாது என்று தெரிந்தும் கணவர் குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து அடித்து துன்புறுத்தி வந்தார்கல்.    சில நாட்களுக்கு முன்பு என் கணவர் என்னை அறையிலேயே ஒரு நாள் முழுவதும்  அடைத்து வைத்திருந்தார். அதனால்  பெற்றோரிடம் போனில் கூட பேச முடியாத நிலை இருந்தது. 

ff

 ஒரு நாள் முழுவதும் அடைத்து வைத்திருந்தவர்  மறுநாள் மதுபோதையில் வந்த கணவர் தனது நண்பர்கள் மூன்று பேரையும் அழைத்து  வந்திருந்தார்.  அறையில்  இருந்த என்னை நான்கு பேரும் சேர்ந்து மாறி மாறி கூட்டு  பாலியல் வன்கொடுமை செய்தார்கள்.   கடுமையாக அவர்களிடம் எதிர்த்து போராடியும் என்னால்  முடியவில்லை.  அதன் பின்னர் என் உடல் மீது பெட்ரோல் ஊற்றி என்னை எரித்துக் கொலை செய்ய முயன்றார் என் கணவர்.  அதிலிருந்து தப்பித்து என் தாய் வீட்டிற்கு வந்து விட்டேன் என்று சொல்லி அழுது இருக்கிறார்.

 பெண்ணின் வாக்குமூலத்தை பெற்றுக் கொண்ட போலீசார்,   வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்ததில் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பது தெரிய வந்ததும், கைது நடவடிக்கை எடுத்தபோது,   இதை தெரிந்துகொண்ட கணவர்  குடும்பத்தினர் கூண்டோடு வீட்டை விட்டு ஓடி  விட்டார்கள்.  அவர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்துள்ளனர்.