ஜிலேபி பாபாவின் லீலைகள் - 120 பெண்களுடன் இருந்த வீடியோக்கள்

 
ji

ஜிலேபி பாபாவின் லீலைகள் அம்பலமாகி இருக்கின்றன.  பாதிக்கப்பட்ட பெண்களின் வீடியோ ஆதாரங்களை வைத்து ஜிலேபி பாபா குற்றவாளி என்று ஹரியானா நீதிமன்றம் தீர்ப்பளித்து இருக்கிறது.  120 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நீதிமன்றத்தில் தண்டனை பெற்று இருக்கிறார் ஜிலேபி பாபா .

ba

ஹரியானா மாநிலத்தில் பதேகாபாத் அருகே உள்ள தோஹ்னா என்கிற பகுதியைச் சேர்ந்தவர் ஜிலேபி பாபா.   63 வயதான  பாபாவுக்கு  தோஹ்னா மக்களிடையே மிகுந்த செல்வாக்கு இருந்தது .  அவர் ஒரு பெண்ணை மயக்கம் அடையச் செய்து பாலியல் பலாத்காரம் செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியானது. இதைக் கண்டு மக்கள் அதிர்ந்து போனார்கள்  பக்தர்கள்.

இதை அடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் 19ஆம் தேதி தோஹ்னா நகர போலீசார் ஜிலேபி பாபாவை கைது செய்தார்கள்.  பின்னர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் ஜிலேபி பாபாவிடம் இருந்து 120 வீடியோக்கள் கைப்பற்றப்பட்டன.  அத்தனை பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டி வந்திருக்கிறார்.

 கைப்பற்றிய வீடியோக்களை வைத்து  ஜிலேபி பாபாவை ஹரியானா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்  போலீசார்.  விசாரணைக்கு பின்னர் ஹரியானா நீதிமன்றம் ஜிலேபி பாபாவை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.

baa

 ஜிலேபி பாபாவின் இயற்பெயர் அமர்புரி.   23 ஆண்டுகளுக்கு முன்பு பஞ்சாப் மாநிலத்தின் மான்சா நகரில் இருந்து தோஹ்னாவுக்கு வந்திருக்கிறார்.   அவரது மனைவி காலமாகிவிட்டார் .  அவருக்கு நான்கு பெண் குழந்தைகள் இன்னும் இரண்டு ஆண் குழந்தைகளும் உண்டு .  குடும்ப வருமானத்திற்காக 13 ஆண்டுகளாக ஜிலேபி கடையை நடத்தி வந்திருக்கிறார்.

 பின்னர் அவர் ஒருவரிடம் மந்திர தந்திரத்தை கற்றுக்கொண்டு அமர்வீர் என்ற பெயரை ஜிலேபி பாபா என்று மாற்றிக் கொண்டு சில வருடங்களாக  மாயமாகி இருக்கிறார் .  பின்னர் ஒரு கோயிலுடன் ஒரு வீட்டை கட்டி தோஹ்னாவுக்கு திரும்பி இருக்கிறார்.   ஜிலேபி  பாபாவை பெண்கள் சுற்றி சுற்றி வந்து பின்பற்றி இருக்கிறார்கள்.   

கடந்த 2018 ஆம் ஆண்டில் கோவிலுக்குள் பாலியல் வன்கொடுமை செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் புகார் அளித்திருக்கிறார்.  இந்த வழக்கில் ஜிலேபி பாபாவுக்கு ஜாமீன் கிடைத்து விட்டது.  அதன் பின்னர் ஜிலேபி பாபா தனது சித்து வேலைகளை பல பெண்களிடம் காட்டி பலரையும் தன் வளையில் வீழ்த்தி பாலியல் பலாத்காரம் செய்து அவற்றை வீடியோவாக எடுத்து மிரட்டி வந்திருக்கிறார்.  இந்த ஆதாரங்களை எல்லாம் போலீசார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததை அடுத்து ஹரியானா நீதிமன்றம் ஜிலேபி பாபாவை குற்றவாளி என்று தீர்ப்பளித்திருக்கிறது.