பிரியாணி கேட்ட மனைவியை எரித்து கொலை செய்த கணவன்!

 
பிரியாணி கேட்ட மனைவியை எரித்து கொலை செய்த கணவன்!

சென்னை அயனாவரம் தாகூர் நகர் 3வது தெருவில் வசிப்பவர் கருணாகரன்(75). ஓய்வுபெற்ற ரயில்வே ஊழியரான இவருக்கு திருமணமாகி பத்மாவதி(66) என்ற மனைவியும், மகேஸ்வரி(50), குமார்(46), ஷகிலா(44), கார்த்திக் (40) என 4 பிள்ளைகள் உள்ளனர். 

பாய் வீட்டு பிரியாணி மிக சுவையாக செய்வது எப்படி | CHICKEN BIRIYANI - YouTube

பிள்ளைகள் நால்வரும் திருமணமாகி தனியாக வசித்து வரும் நிலையில் கருணாகரன், பத்மாவதி தம்பதியும் தனியாக வசித்து வருகின்றனர். மேலும் கருணாகரன், பத்மாவதி ஆகிய இருவரும் வயது முதிர்வின் காரணமாகவும், தனியாக வசித்து வந்ததால் கடந்த சில மாதங்களாக சற்று மனநலம் பாதிக்கப்பட்டதால் பிள்ளைகள் வீட்டில் தங்க வைத்தாலும் அவர்களுடன் சண்டை போட்டு விட்டு வீட்டிற்கு வந்து விடுவது வழக்கம் என கூறப்படுகிறது.  இதே போல் கணவன், மனைவி இடையே அடிக்கடி சிறுசிறு தகராறு ஏற்படுவதும், இதனால் இருவரும் அடிக்கடி பேசாமலும் இருந்து வந்துள்ளனர்.

இந்நிலையில் கருணாகரன் தனது மனைவி பத்மாவதிக்கு சரியாக சாப்பாடு வாங்கி கொடுப்பதில்லை என கூறப்படுகிறது. நேற்று இரவு கருணாகரன் மட்டும் பிரியாணி வாங்கி வந்து தனியாக சாப்பிட்டுள்ளார். அப்போது பத்மாவதி தனது கணவரிடம் தனக்கும்  பிரியாணி வேண்டும் என கேட்டுள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த கருணாகரன் உடனே வீட்டில் இருந்த  மண்ணெண்ணெயை பத்மாவதி மீது ஊற்றி தீ வைத்துள்ளார். உடனே பத்மாவதி தீயுடன் ஓடிவந்து கணவர் கருணாகரனை கட்டி பிடித்து கொண்டதால் இருவரும் தீயில் எரிந்து காயமடைந்தனர். 

பின்னர் இவர்களது வீட்டில் இருந்து புகை வருவதை பாரத்த அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து  கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது இருவரும் தீயில் எரிவதை கண்டு பதறிபோய் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர்  போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அயனாவரம் போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்து தீக்காயமடைந்த இருவரையும் மீட்டு ஒரே ஆம்புலன்சில் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பத்மாவதி 40 % தீக்காயங்களுடனும், கருணாகரன் 20% தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.  இந்நிலையில் சிகிச்சை பெற்று வந்த பத்மாவதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கருணாகரனும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் குறித்து அயனாவரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.