சிக்கன் கபாப்புல காரம் குறைவாக இருந்ததால் மனைவிக்கு கத்திக்குத்து! உருட்டுக்கட்டை தாக்கு!

 
ச்

சிக்கன் கபாபில் காரம்  குறைவாக இருந்தது என்று மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தி உருட்டு கட்டையால் அடித்திருக்கிறார் கணவர். ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்த மனைவி இறந்து விட்டார் என்று நினைத்து  போலீசுக்கு பயந்து மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார் கணவர். மனைவி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.  கர்நாடக மாநிலத்தில் நடந்திருக்கிறது இந்த சம்பவம் .

பெங்களூரு புறநகரில் ஆனேக்கல் தாலுகா பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்(48).  இவரது மனைவி ஷாலினி.   கணவன் -மனைவி இருவரும் தனியார் ஆயத்த ஆடை நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்கள்.  மது போதைக்கு அடிமையான சுரேஷ் தினமும் குடித்துவிட்டு வந்து ஷாலினியிடம் தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார். 

க்க்

சம்பவத்தன்று மனைவியிடம் குடிபோதையில் வந்த சுரேஷ்,  சிக்கன் கபாப் செய்து தரும்படி சொல்லி இருக்கிறார்.  அதன்படியே ஷாலினியும் சிக்கன் கபாப் செய்து கொடுத்திருக்கிறார்.  அதை  சாப்பிட்டு பார்த்த சுரேஷ்க்கு ஒரே ஆத்திரம். அதில் காரம் குறைவாக இருந்ததால்,  எதற்கு காரம் குறைவாக இருக்கிறது என்று கேட்டு சத்தம் போட்டு இருக்கிறார்.  அதற்கு ஷாலினி பதில் சொல்ல,  இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கிறது.   இதில் ஆத்திரமடைந்த சுரேஷ் கிச்சனில் இருந்த கத்தியை எடுத்து மனைவியை சரமாரியாக குத்தி இருக்கிறார்.  உருட்டுக்கட்டையை எடுத்து வந்தும் கடுமையாக தாக்கி இருக்கிறார்.  இதில் மயக்கம் அடைந்து ரத்த வெள்ளத்தில் விழுந்து கிடந்திருக்கிறார் ஷாலினி. 

 சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த ஷாலினியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.  போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.  ஷாலினி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.   மனைவி இறந்து விட்டதாக நினைத்த சுரேஷ் போலீஸ் கைதுக்கு பயந்து, மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்.  சுரேஷ் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பன்னரகட்டா போலீசாருக்கு தெரிய வந்தது.  இதையடுத்து அவர்கள் சுரேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.