ஆடைகளை அவிழ்த்துவிட்டதால் நிர்வாணமாக வீட்டுக்கு ஓடிய சிறுமி -கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு பின் நடந்த கொடுமை
15 வயது சிறுமியை தூக்கிச் சென்ற நான்கு இளைஞர்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த பின்னர் ஆடைகளை அவிழ்த்து விட்டு நிர்வாணமாகவே வீட்டுக்குப்போ என்று அடித்து துரத்தி இருக்கிறார்கள். உத்தரபிரதேசத்தில் நடந்திருக்கிறது இந்த கொடூரம்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொராதாபாத் மாவட்டம். இம்மாட்டத்தில் போஜ்பூர் அருகே இருக்கும் கிராமத்தைச் சேர்ந்த அந்த 15 வயது சிறுமியை ஆண் நண்பர் ஒருவர் பக்கத்து கிராமத்தில் நடந்த திருவிழாவிற்கு போய்விட்டு வரலாம் என்று அழைத்துச் சென்றிருக்கிறார்.
அங்கே அந்த ஆண் நண்பருடன் மேலும் மூன்று இளைஞர்கள் வந்து சேர்ந்திருக்கிறார்கள். சிறுமியிடம் பேசிக்கொண்டிருந்த போது திடீரென்று வாயைப் பொத்தி தூக்கிச் சென்றிருக்கிறார்கள். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பாலியல் வன்கொடுமை செய்த பின்னர் அச்சிறுமியின் ஆடைகளை பிடுங்கிக் கொண்டு நிர்வாணமாகவே வீட்டுக்குப் போ என்று அடித்து துரத்தி இருக்கிறார்கள்.
வேறு வழி இன்றி அவர்களிடமிருந்து தப்பித்தால் போதும் என்று ஆடையில்லாமல் நிர்வாணமாக அழுது கொண்டே ஓடி இருக்கிறார். இதை பார்த்த சிலர் வீடியோ எடுத்து வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர். கண்டனங்கள் குவிந்துள்ளன.
இதற்குள் சிறுமியின் தாய்மாமன், போஜ்பூர் காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நான்கு இளைஞர்களில் ஒருவரை கைது செய்துள்ளனர். தலைமறைவாக இருக்கும் மற்ற மூன்று பேரையும் பிடிக்க தனிப்படை அமைத்துள்ளனர்.