மகனை வெட்டுக் கொன்ற கொடூர தந்தை

 
murder

கோவில்பட்டி அருகே குடிபோதையில் தகராறு செய்த மகனை தந்தை வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம்  கோவில்பட்டி அருகே உள்ள காட்டு  ரான்பட்டியை சேர்ந்த முத்துராஜ் கூலி வேலை செய்து வருகிறார்,இவருக்கு மூன்று பெண்களும்,இரண்டு மகன்கள் உள்ளனர் இவருடைய இளைய மகன் முத்துக்குமார் 27 வேளைக்கு செல்லாமல்  அடிக்கடி மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து தகராறு செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று மது போதையில்  வீட்டிற்கு வந்து தன் தந்தை முத்துராஜிடம் தகராறு செய்துள்ளர் இதில்  முத்துக்குமாருக்கும் அவருடைய தந்தை முத்துராஜ்க்கும் தகராறு முற்றவே முத்துக்குமார் தன் தந்தையை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார், அப்போது முத்துராஜ் தன் மகனை கீழே தள்ளிவிட்டு அவர் வைத்திருந்த அரிவாளால் மகனை வெட்டி படுகொலை செய்தார், இதில் மகன் முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே இரத்த விழத்தில் பரிதாபமாக உயிரிழந்தார் 
பின்னர் முத்துராஜ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் ,தகவல் அறிந்தது வந்த  நாலாட்டின்புத்தூர் போலீசார் உடலைகைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர், இதுகுறித்து நாலாட்டின்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துராஜை போலீசார் தேடி வருகின்றனர், கோவில்பட்டி அருகே குடி போதையில் தந்தையை வெட்ட முயன்ற மகனை தந்தை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.