ரகசிய கேமரா வைத்த மகள்! தந்தை பலாத்காரம் செய்த வீடியோ வைரல்

 
w

பெற்ற மகளை மிரட்டி தந்தை பலாத்காரம் செய்ததை  ரகசியமாக கேமரா வைத்து வீடியோ எடுத்திருக்கிறார் மகள்.  அந்த பெண்ணின் தந்தையின்  செயல் வெளி உலகத்திற்கு தெரிய வேண்டும் என்று  அந்த வீடியோவை வலைதளங்களிலும் வெளியிட்டு இருக்கிறார்.  அது வைரலாகி வருகிறது.

 பீகார் மாநிலத்தில் சமஸ்திபூர் மாவட்டம்.    இம்மாவட்டத்தில் ரோசெராவில் வசித்துவரும் 50 வயதுடைய நபர் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.   இவர் தனது மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து இருக்கிறார்.   தொடர்ந்து மகளை மிரட்டி இப்படி பாலியல் பலாத்காரம் செய்து வந்திருக்கிறார்.

g

 இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அப்பெண்,  தந்தையின் மிக மோசமான செயலை அயோக்கியத்தனத்தை வெளி உலகத்திற்கு அம்பலப்படுத்த வேண்டும் என்று நினைத்திருக்கிறார்.   இதை அடுத்து ரகசிய கேமராவை செட் செய்து வைத்திருக்கிறார்.  அதன்படி தந்தை வழக்கம்போல் மகளை பாலியல் பலாத்காரம் செய்த போது அந்த கேமராவில் வீடியோ பதிவாகி இருக்கிறது.

 அதன் பின்னர் அந்த வீடியோவை வலைத்தளங்களில் பதிவிட்டிருக்கிறார்.  பெற்ற மகளை  தந்தையே  பலாத்காரம் செய்கிறார் என்றும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இதற்கு பலரும் தந்தையின் செயலுக்கு கண்டனம் தெரிவித்து வந்துள்ளனர்.  

 நீதி கேட்டு தான் அந்த மகள் துணிந்து இப்படி ஒரு செயலை செய்திருக்கிறார் என்று பலரும் குரல் கொடுக்க,  போலீசார் தானாக முன்வந்து அப்பெண்ணிடம்  புகார் எடுத்துக் கொண்டு வழக்கு பதிவு செய்துள்ளனர்.  சம்பந்தப்பட்ட நபரை கைது செய்துள்ளனர்.