8ம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் எழுதிய லவ் லெட்டர்
காதலிக்கிறேன் என்றும், திருமணம் செய்ய விரும்புகிறேன் என்றும் எட்டாம் வகுப்பு பள்ளி மாணவிக்கு ஆசிரியர் எழுதிய அந்த லவ் லெட்டர் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கன்னோஜ் மாவட்டம் . அம்மாவட்டத்தில் சதார் கொத்வாலி என்கிற கிராமத்தில் உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு ஹரி ஓம் சிங் என்கிற ஆசிரியர் லவ் லெட்டர் எழுதி கொடுத்திருக்கிறார். அந்த லவ் லெட்டரில், உன்னை அதிகம் விரும்புகிறேன் . விடுமுறை காலத்தில் நீ இல்லாதது எனக்கு அதிகம் வருத்தம் தருகிறது. எப்போது முடியுமோ அப்போது தொலைபேசி வழியாக என்னை தொடர்பு கொண்டு பேசு . தேர்வு கால விடுமுறை விடுவதற்கு முன்பு தனியாக என்னை வந்து சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன். உன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
12 வரிகள் உள்ள அந்த கடிதத்தில் மேலும், இதை படித்தவுடன் கிழித்து எறிந்து விடவும் என்றும் ஆசிரியர் குறிப்பிட்டு இருக்கிறார்.
அந்த மாணவி கடிதத்தில் உள்ள விஷயங்களை படித்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார். இதை பெற்றோரிடம் சொல்லி இருக்கிறார் . பெற்றோர் அந்த கடிதத்தை பார்த்து விட்டு கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அதன் பின்னர் மாணவியின் தந்தை ஆசிரியரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். அதற்கு அந்த ஆசிரியர் தன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று சொல்லி இருக்கிறார். தொடர்ந்து துன்புறுத்தினால் மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்து கொள்வேன் என்று மிரட்டி இருக்கிறார்.
அதன் பின்னர் வேறு வேறு செல்போன் எண்களில் இருந்து மாணவியின் தந்தைக்கு போன் செய்து கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி இருக்கிறார் ஆசிரியர். இதை அடுத்து அந்த மாணவியின் தந்தை போலீசில் சென்று பாலியல் துன்புறுத்தல் புகார் கொடுத்திருக்கிறார். கன்னோஜ் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இது குறித்து வழக்கு பதிவு செய்து ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்திருக்கிறார்.