நடத்தையில் சந்தேகம் மனைவியின் கழுத்தை அறுத்துக் கொன்ற கணவன்

 
kk

மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு போலீசில் சென்று சரணடைந்துள்ளார் கணவர்.  

 திருவண்ணாமலை மாவட்டத்தில் அலங்கார மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்.    இவரின் மனைவி பச்சையம்மாள்.   இத்தம்பதிக்கு திருமணமாகி 12 வருடங்கள் ஆகின்றன.   11 வயதில் ஒரு மகளும்,   9 வயதில் மகனும் உள்ளனர் .   சுரேஷ் சொந்தமாக கார் வைத்து வாடகை சவாரி சென்று வந்திருக்கிறார்.

 பச்சையம்மாள் நடத்தையில் சுரேஷுக்கு அண்மைக்காலமாகவே சந்தேகம் ஏற்பட்டு வந்திருக்கிறது.   இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது .   கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக கணவனிடம் இதனால் சண்டை போட்டுக் கொண்டு குரால்பாக்கம் கிராமத்தில் இருக்கும் தனது அத்தை வீட்டுக்குச் சென்றிருக்கிறார் பச்சையம்மாள்.

kk

 நேற்று காலை 10 மணி அளவில் ஒரு ஆள் பார்க்கும் கிராமத்திற்கு சென்று இருக்கிறார் சுரேஷ்.  அங்கேயும் கள்ளக்காதல் பற்றி பேசி பச்சையம்மாளிடம் தகராறு செய்திருக்கிறார்.  இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றியிருக்கிறது.  

 அப்போது ஆத்திரமடைந்த சுரேஷ்,   தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்து இருக்கிறார். இதில் பச்சையம்மாள் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார் .  இதன் பின்னர் போளூர் காவல் நிலையத்திற்கு சென்று மனைவியை கொலை செய்து விட்டதாக சொல்லி சரணடைந்திருக்கிறார்.

 இதை அடுத்து போலீசார் பச்சையம்மாள் கொலை செய்யப்பட்ட இடத்திற்கு சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கின்றனர்.  மேற்கொண்டு இந்த கொலை விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் போலீசார்.