தம்பியுடன் கடைக்குச் சென்ற சிறுமிக்கு போதை ஆசாமியால் ஏற்பட்ட கதி
தம்பியுடன் கடைக்குச் சென்ற 11 வயது சிறுமியை சாலையில் எதிரே வந்து போதை ஆசாமி சிறுமியின் கையை பிடித்து இழுத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு இருக்கிறார். அச்சிறுமி போட்ட அலறல் சத்தத்தில் அங்கிருந்து ஒரு ஓடி வந்த அந்த போதை ஆசாமியை பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.
தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தனது மனைவி, 11 வயது மகள் மற்றும் மகனுடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வில்லுக்குறி பகுதியில் நடந்த உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். அப்போது அந்த 11 வயது சிறுமி தனது தம்பியுடன் அதே பகுதியில் உள்ள கடைக்கு சென்றிருக்கிறார்.
சாலையில் நடந்து சென்றபோது எதிரே வந்த போதை ஆசாமி இளைஞர், அந்த சிறுமியின் கையை பிடித்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு இருக்கிறார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த சிறுமி சத்தம் போட்டு அலறி இருக்கிறார்.
உடனே அந்த இளைஞர் தப்பி ஓட முயன்றிருக்கிறார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை பிடித்து இரணியல் போலீசில் ஒப்படைத்துள்ளனர். இதை அறிந்த சிறுமியின் தந்தை குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
புகாரின் பேரில் இந்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தி இருக்கிறார்கள். அவர் அதே பகுதியைச் சேர்ந்த கொத்தனார் என்பது தெரிய வந்திருக்கிறது அந்த இளைஞர் ஜெகதீஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து சிறையில் அடைத்து உள்ளனர் போலீசார்.