பேருந்துக்காக காத்திருந்த கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை

 
rape

வேலூர் அருகே பேருந்துக்காக காத்திருந்தார் கல்லூரி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த பேக்கரி மாஸ்டர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த கத்தாரிக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார்(25). இவர் அணைக்கட்டு அருகே உள்ள தார்வழி என்ற இடத்தில் உள்ள ஒரு பேக்கரி கடையில் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். அதேபோல் ஒடுகத்தூர் அருகே ஒரு பகுதியை சேர்ந்த 17 வயது பெண் அரசு கல்லூரியில் பி.ஏ.தமிழ் முதலாமாண்டு படித்து வருகிறார். இவர், குடும்ப சூழ்நிலை காரணமாகவும், படிப்பு செலவிற்காகவும் விடுமுறை நாட்களில் ஒடுகத்தூரில் உள்ள தனியார் துணி கடையில் வேலை செய்து வருகிறார். 

இவர் வேலை முடித்துவிட்டு இரவு வீட்டுக்கு வரும்போது அவரது தந்தை வந்து அழைத்து செல்வது வழக்கம். இந்நிலையில், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் துணி கடைக்கு சென்றுவிட்டு இரவு 9 மணியளவில் வீட்டிற்கு செல்வதற்காக கத்தாரிக்குப்பம் பேருந்து நிறுத்தத்துக்கு வந்தார். அன்றைய தினம் மாணவியை அழைத்து செல்ல அவரது தந்தை வரவில்லை என்பதை  நோட்டமிட்ட சரத்குமார் மாணவியின் கையை பிடித்து தன்னுடன் வரும்படி வற்புறுத்தி உள்ளார். இதனை சற்றும் எதிர்பாராத மாணவி கத்தி கூச்சலிட்டுள்ளார். அப்போது, சரத்குமார் மாணவியின் வாயில் கைக்குட்டைவைத்து அழுத்தி அருகில் உள்ள வாழை தோட்டத்திற்கு தூக்கிச் சென்றுள்ளார். 

வாழைத் தோட்டத்தில் கல்லூரி மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். நடந்த சம்பவம் குறித்து யாரிடமாவது கூறினால் உன்னையும், உன் குடும்பத்தையும் கொன்றுவிடுவேன்’ என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. நடந்த சம்பவத்தை வீட்டிற்கு சென்ற மாணவி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில், வேப்பங்குப்பம் இன்ஸ்பெக்டர் உலகநாதன் போக்சோ சட்டத்தின் கீழ் சரத்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.