8 வயது சிறுமிக்கு பாலியல் சீண்டல் - 2 முதியவர்கள் கைது

 
gg

எட்டு வயசு சிறுமிக்கு மிட்டாய் வாங்கி கொடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இரண்டு முதியவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணம் மேலக்காவேரி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம்.  65 வயதான இவர் கூலித் தொழிலாளி.   அதே போல் இன்னொரு கூலித் தொழிலாளி முருகன். அவருக்கு வயது 55.  இந்த இரண்டு முதியவர்களும் கடந்த சில தினங்களாக அப்பகுதியைச் சேர்ந்த எட்டு வயது சிறுமிக்கு மிட்டாய் வாங்கி கொடுப்பது போல் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து வந்திருக்கிறார்கள்.

po

 ஒரு நாள் அந்த சிறுமியிடம் பாலியல் சில்மிசத்தில் இருவரும் ஈடுபட்ட போது அந்த சிறுமியின் தந்தை பார்த்து இருவரையும் கண்டித்து இருக்கிறார்.  அதன் பின்னர் அப்பகுதியைச் சேர்ந்தவர்களும் இருவரும் அடிக்கடி அந்த சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதை பார்த்து அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்துள்ளனர். கும்பகோணம் அனைத்து மகளிர் போலீசார் இந்த இரண்டும் முதியவர்கள் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர்.