ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை
Nov 23, 2022, 07:29 IST1669168798086
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளனர். டெல்லியில் நடந்திருக்கிறது இந்த பயங்கர சம்பவம்.
டெல்லியில் பாலம் நகரில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நாலு பேரை கத்தியால் குத்தி கொலை செய்திருக்கிறார். தந்தை, இரண்டு மகள்கள், வயதான மூதாட்டி உள்பட நான்கு பேரை கொலை செய்த மர்ம நபரை டெல்லி போலீசார் விரைந்து பிடித்துள்ளனர். அவரிடம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரையும் கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பாலம் நகர் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.