இடையூறாக இருந்த 3 வயது குழந்தையை பீர் பாட்டிலால் அடித்து கொன்ற கள்ளக்காதலன்

 
na

கள்ளக்காதலி உடன் உல்லாசமாக இருந்தபோது இடையூறாக இருந்த 3 வயது குழந்தையை பீர் பாட்டிலால் அடித்து கொலை செய்துள்ளான் கள்ளக்காதலன்.   அவனை போலீசார் கைது செய்துள்ளனர்.

 ஓசூரில் பார்வதி நகரில் வசித்து வந்தவர் சக்தி.  கட்டிட வேலை செய்து வந்த இவரின் மனைவி நந்தினி.   தம்பதிக்கு பிரவீன் என்று 7 வயதில் ஒரு சிறுவனும்,  ஜெகநாதன் என்று மூன்று வயதில் ஒரு குழந்தையும் இருந்தனர்.  கடந்த 7 மாதங்களுக்கு  முன்பாக  சக்தி இறந்துவிட்டார்.   இதை அடுத்து குழந்தைகளுடன் தனியாக வாழ்ந்து வந்த நந்தினிக்கு பார்வதி நகரை சேர்ந்த ரஞ்சித் என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது.

 இதையடுத்து ஓசூர் அடுத்த ஆளூரில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள்.   நந்தினி தனது இளைய மகன் ஜகன்நாதனை தன்னோடு வளர்த்து வந்திருக்கிறார்.   மூத்த மகன் பிரவீனை வெளியூரில் ஹாஸ்டலில் தங்கி படிக்க வைத்திருக்கிறார்.  

ra

 கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஆறாம் தேதி ரஞ்சித் -நந்தினி இரண்டு பேரும் உல்லாசமாக இருந்திருக்கிறார்கள் .   அப்போது மூன்று வயது குழந்தை ஜெகநாதன் இடையூறாக இருந்திருக்கிறது.   இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித் பீர் பாட்டிலால் குழந்தையின் தலையில் ஆவேசமாக அடித்திருக்கிறார்.   படுகாயம் அடைந்த குழந்தை ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர்.  பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர்.

 அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை கடந்த டிசம்பர் 22ஆம் தேதி அன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்  செய்து வீட்டுக்கு அழைத்து சென்றிருக்கிறார்கள்.   25ஆம் தேதி அன்று குழந்தை வாந்தி எடுத்திருக்கிறது.   சிறிது நேரத்தில் உயிரிழந்திருக்கிறது.   இதை அடுத்து ரஞ்சித்தும் அவரோடு சேர்ந்தவர்களும் குழந்தையை  சுடுகாட்டில் புதைத்திருக்கிறார்கள்.

 குழந்தை எங்கே என்று நந்தினி  தாய் வள்ளி, நந்தினி இடம்  கேட்டு இருக்கிறார்.  அப்போது முன்னுக்கு பின் முரணான பதிலை சொல்லி இருக்கிறார்.  இதை அறிந்த ரஞ்சித்,  கொலை செய்து விடுவதாக மிரட்டி இருக்கிறான்.  

உடனே குழந்தையின் சாவில் மர்மம் இருப்பதாக ஓசூர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.   புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி குழந்தையை பீர்பாட்டிலால் தாக்கி கொலை செய்தார்.   இதை அடுத்து புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை வட்டாட்சியர் முன்னிலையில் தோன்றி எடுத்து பிரேத பரிசோதனை மேற்கொண்டு இருக்கிறார்கள் . 

விசாரணையில் விபரம் எல்லாம் தெரிய வந்ததும் இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.