அந்த ஜோடிகள் எடுத்த அதிர்ச்சி முடிவு: மனைவியை இழந்து கணவன் தவிப்பு: கணவனை இழந்து புதுமணப்பெண் கண்ணீர்

 

அந்த ஜோடிகள் எடுத்த அதிர்ச்சி முடிவு: மனைவியை இழந்து கணவன் தவிப்பு: கணவனை இழந்து புதுமணப்பெண் கண்ணீர்

பிரிந்து வாழ முடியாது என்று கள்ளக்காதல் ஜோடிகள் எடுத்த அதிர்ச்சி முடிவினால் மனைவியை இழந்து குழந்தையுடன் தவிக்கிறார் கணவன். கணவனை இழந்து கண்ணீர் வடிக்கிறார் புதுமணப்பெண்.

அந்த ஜோடிகள் எடுத்த அதிர்ச்சி முடிவு: மனைவியை இழந்து கணவன் தவிப்பு: கணவனை இழந்து புதுமணப்பெண் கண்ணீர்

நாகர்கோவில் அடுத்த சங்கரன் புதூரை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(25). தேரூர் பஞ்சாயத்தில் குப்பை வண்டி ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இதே பஞ்சாயத்தில் சுபாஷின் மனைவி வித்யா(31) தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார்.

ஒரே இடத்தில் வேலை செய்து வந்த சுரேஷ்குமாருக்கும் வித்யாவுக்கும் காதல் மலர்ந்துள்ளது. வித்யாவுக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள் என்று தெரிந்தும் வித்யாவை விரும்பி வந்துள்ளார் சுரேஷ்குமார்.

சுரேஷ்குமாரும் வித்யாவும் வேலைக்கு லீவு போட்டுவிட்டு அடிக்கடி பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். சுரேஷ்குமாரின் வீட்டினருக்கு இந்த விபரம் தெரியவந்ததால், உடனடியாக சுரேஷ்குமாருக்கு திருமணம் செய்து வைத்தால் சரியாகிவிடும் என்று நினைத்து, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் ஊரை சேர்ந்த பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்துவிட்டனர்.

அந்த ஜோடிகள் எடுத்த அதிர்ச்சி முடிவு: மனைவியை இழந்து கணவன் தவிப்பு: கணவனை இழந்து புதுமணப்பெண் கண்ணீர்

திருமணத்திற்கு பின்னர் சிலநாட்கள் தன்னை சுரேஷ்குமார் சந்திக்காததால் துடிதுடித்து போயுள்ளார் வித்யா. இதை சுரேஷ்குமார் வேலைக்கு வந்தபோது சொல்லி அழுதிருக்கிறார். சுரேஷ்குமாரும் இதையே சொல்லி அழுதிருக்கிறார்.

இந்த நிலையில், வித்யா -சுரேஷ்குமார் சங்கதி சுபாஷுக்கும் தெரியவந்துள்ளது. மனைவி வித்யாவை அவர் கண்டித்து பார்த்தும், வித்யா கேட்கவில்லையாம். இரு வீட்டிலும் இடையூறு தருவதாக நினைத்த வித்யா -சுரேஷ்குமார் ஜோடிகள் கூடங்குளம் அருகே செட்டிக்குளத்தில் தனி வீடு எடுத்து குடித்தனம் நடத்தி வந்துள்ளனர்.

அந்த ஜோடிகள் எடுத்த அதிர்ச்சி முடிவு: மனைவியை இழந்து கணவன் தவிப்பு: கணவனை இழந்து புதுமணப்பெண் கண்ணீர்

இதற்கிடையில் மனைவி வித்யாவை காணவில்லை என்று சுபாஷும், கணவனை காணவில்லை என்று சுரேஷ்குமாரின் மனைவியும் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

போலீசாரின் விசாரணையில் அந்த ஜோடிகள் செட்டிகுளத்தில் இருப்பது தெரியவந்ததும் அவர்களை பிடிக்க விரைந்தனர். போலீஸ் வரும் தகவல் அறிந்ததும், தங்களை பிரித்துவிடுவார்கள் என்று நினைத்த சுரேஷ்குமாரும் வித்யாவும் விஷம் குடித்துள்ளனர்.

இருவரையும் மீட்ட போலீசார் நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கடந்த 13ம் தேதி சிகிச்சை பலனின்றி சுரேஷ்குமார் உயிரிழந்தார். நேற்று முன் தினம் இரவு சிகிச்சை பலனின்றி வித்யா உயிரிழந்தார்.

மனைவியை வித்யாவை இழந்து குழந்தைகளுடன் தவிக்கிறார் சுபாஷ். கணவன் சுரேஷ்குமாரை இழந்து கண்ணீர் விடுகிறார் புதுமணப்பெண்.