கள்ளகாதலியின் 2 வயது ஆண் குழந்தையை கொடூரமாக கொன்ற கள்ளகாதலன்

 
murder

ஆரணி அருகே கள்ளகாதலியின் 2 வயது ஆண்  குழந்தையை கொடூரமான முறையில் தாக்கி கொலை செய்த கள்ளகாதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

உஷார்! வீட்டிலிருந்த டிவி விழுந்து 2 வயது குழந்தை பலி!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சந்தவாசல் ஊராட்சிக்குபட்ட காங்கரனந்தல்  கிராமத்தை சேர்ந்த ஜெயசுதா (27). இவர் கடந்த 2017ம் ஆண்டு சென்னை தனியார் மருத்துவமனையில் நர்ஸ்சாகவும் அதே மருத்துவமனையில் சென்னையை சேர்ந்த குணசேகரன் என்பவர் எலக்ட்ரீசனாக பணிபுரிந்து வந்த இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதனால் கடந்த 2018ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதில் ஜெயசுதா, கருவுற்று நிலையில் குணசேகரன் ஜெயசுதா தம்பதியினர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். மேலும் இதனால் தாய் வீடான சந்தவாசல் காங்கரனந்தல் கிராமத்தில் ஜெயசுதாவிற்கு தஞ்சமடைந்தார்.

பின்னர் ஜெயசுதாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளன. இதனையடுத்து தனது குழந்தையான ஏனோக்ராஜ்னுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். அப்போது ஜெயசுதாவின் உறவினர் மேஸ்திரி மாணிக்கம் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் கள்ளகாதலாக மாறியது. மேலும் மாணிக்கத்திற்கு ஏற்கனவே திருமணமாகி நதியா என்ற மனைவியும் தீட்னாஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். ஆனால் மாணிக்கம் தன்னுடைய குடும்பத்தினரை கைகழுவி விட்டு கள்ளகாதலியான ஜெயசுதா மற்றும் ஜெயசுதாவின் குழந்தையை ஆரணி அருகே சேவூர் கிராமத்தில் தனியாக வீடு எடுத்து குடிபெயர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இதனையொடுத்து மேஸ்திரி மாணிக்கம் தினந்தோறும் மது குடித்து விட்டு கள்ளகாதலியிடம் உன் குழந்தை எனக்கு பொறக்கவில்லை உன் முதல் கணவர் குணசேகரனுக்கு பிறந்தது என்று தினந்தோறும் 2வயது குழந்தை ஏனோக்ராஜ் தாக்கியும் கொடூமைபடுத்தியும் சூடு வைத்தும் தண்ணீர் தொட்டில் 2 கால்களை பிடித்து மூழ்கடித்து மற்றும் கட்டையால் தாக்கியும் கொடூரமான முறையில் கொடுமைபடுத்தி வருவது வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் கடந்த மாதம் 21ந் தேதி மேஸ்திரி மாணிக்கம் வழக்கம் போல் மது குடித்துவிட்டு கள்ளகாதலி ஜெயசுதாவிடம் வாக்குவாதம் செய்து ஆத்திரத்தில் 2 வயது குழந்தை ஏனோக்ராஜ் கட்டையால் தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த 2வயது ஆண் குழந்தை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இருதய எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்கு அனுமதிக்கபட்டு அறுவை சிகிச்சை செய்துள்ளர். இதனையொடுத்து வீட்டில் இருந்த 2 வயது ஆண் குழந்தை உடல்நிலை சரியில்லாமல் சந்தவாசல் தனியார் மருத்துவமனையில் முதலுதவி செய்து மேல்சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டு சிகிச்சை பலனின்றி 2வயது ஆண் குழந்தை ஏனோக்ராஜ் இறந்துவிட்டார். பின்னர் பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.