கையில் கயிறு கட்டி குளத்தில் மூழ்கி 2 பெண்கள் தற்கொலை!

 

கையில் கயிறு கட்டி குளத்தில் மூழ்கி 2 பெண்கள் தற்கொலை!

கையில் கயிறு கட்டி குளத்தில் மூழ்கி இரண்டு பெண்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கையில் கயிறு கட்டி குளத்தில் மூழ்கி 2 பெண்கள் தற்கொலை!

இந்தியாவில் கடந்த 2019-ம் ஆண்டு தேசிய குற்ற ஆவணங்கள் அமைப்பு ஆய்வு செய்த அறிக்கையின் படி, ஒவ்வொரு 4 நிமிடத்திற்கும் ஒருவர் தற்கொலை செய்து கொண்டு கொள்வது தெரியவந்துள்ளது. இதில் தமிழ்நாடு 2-வது இடத்திலும், நகரங்களில் அடிப்படையில் சென்னை முதலிடத்திலும் உள்ளது.

கையில் கயிறு கட்டி குளத்தில் மூழ்கி 2 பெண்கள் தற்கொலை!

இந்நிலையில் கன்னியாகுமரி சுசீந்திரம் அருகே தங்களது கைகளில் கயிறு கட்டி குளத்தில் மூழ்கி 2 பெண்கள் தற்கொலை செய்து கொண்டனர். இளைய நயினார் குளத்தில் மூழ்கிய மூன்று பெண்களில் உயிருக்குப் போராடிய மூதாட்டி ஒருவர் மீட்கப்பட்டுள்ளார். மற்ற இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள நிலையில் இரு உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவர்கள் வறுமை காரணமாக தற்கொலை செய்து கொண்டார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.