எனக்கு வயசு அதிகம்னு இப்பத்தான் தெரியுதா? நீ எவ கூடயும் வாழ கூடாது.. இளைஞரை ரத்தவெள்ளத்தில் சாய்த்த பெண்

 

எனக்கு வயசு அதிகம்னு இப்பத்தான் தெரியுதா?  நீ எவ கூடயும் வாழ கூடாது.. இளைஞரை ரத்தவெள்ளத்தில் சாய்த்த பெண்

கொடைக்கானலில் அன்னை தெரசா நகரைச்சேர்ந்தவர் பிரதீப். கார் டிரைவரான இவர், சுற்றுலா பயணிகளின் வழிகாட்டியாயாகவும் இருந்துவந்துள்ளர்.

அதே பகுதியில் கணவனை இழந்து தனிமையில் வாழ்ந்து வந்தார் பிரமிளா(40). கணவனை இழந்து ஆறு ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், பிரதீப் மீது பிரமிளாவுக்கு ஆசை உண்டாகி இருக்கிறது. இதனால் பிரதீப்புடன் தினமும் மணிக்கணக்கில் பேசி வந்துள்ளார். பின்னர் இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர்.

எனக்கு வயசு அதிகம்னு இப்பத்தான் தெரியுதா?  நீ எவ கூடயும் வாழ கூடாது.. இளைஞரை ரத்தவெள்ளத்தில் சாய்த்த பெண்

நாளடைவில் அக்கம்பக்கத்தினர் இவர்களை கணவன்,மனைவி என்றே நினைக்கும்படியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்த விவகாரம் பிரவீன் வீட்டாருக்கு தெரியவர, போயும் போயும் உனக்கு 40 வயசு பொம்பளை தானா கிடைச்சது என்று திட்டினார்கள். ’’அந்த பொம்பளையை விட்டுவிடு.. உனக்கு வேறு ஒரு பொண்ணை பார்த்து திருமணம் செய்துவைக்கிறோம்’’என்று உறவினர்கள் சொன்னதைக்கேட்டு, பிரமிளாவிடம் பேசியிருக்கிறார் பிரதீப்.

’’எனக்கு தாலி கட்டாததால்தான் நீ இன்னொரு பொண்ணை யோசிக்க அரம்பிச்சுட்ட…முதல்ல நீ எனக்கு தாலி கட்டு’’என்று கேட்டிருக்கிறார் பிரமீளா. இதனால் பிரதீப்புக்கும் பிரமீளாவுக்கு இடையே வாக்குவாதம் முற்றியிருக்கிறது.

தீபாவளி தினத்தன்றும் பிரமீளா வீட்டில் பண்டிகையை கொண்டாடி இருக்கிறார் பிரதீப். அப்போது மீண்டும் திருமணம் பற்றிய பேச்சுவார்த்தை தொடங்கியதும், ‘’உனக்கு வயசு அதிகம்னு என் வீட்டுல சொல்லுறாங்க..’’என்று பிரதீப் சொல்ல,

எனக்கு வயசு அதிகம்னு இப்பத்தான் தெரியுதா?  நீ எவ கூடயும் வாழ கூடாது.. இளைஞரை ரத்தவெள்ளத்தில் சாய்த்த பெண்

‘’எனக்கு வயசு அதிகம்னு இப்பத்தான் தெரியுதா? இத்தனை நாளும் உனக்கு தெரியலையா?’’என்று ஆத்திரத்துடன் கேட்க, பதிலுக்கு பிரதீப்பும் ஆத்திரத்திரத்துடன் பேச வாக்குவாதம் முற்றியிருக்கிறது. இதில் ஆத்திரத்தின் உச்சிக்கே போன பிரமிளா, ‘’என்னையை விட்டுட்டு நீ எவ கூடயும் வாழ கூடாது..’’என்று பிரதீப்பின் தலையில் ஆவேசமாக கத்தியை குத்தியுள்ளார். இதை சற்றும் எதிர்பாராத பிரதீப் அலறி துடிக்க, கழுத்து, மார்பு என்று அடுத்தடுத்து கத்தியால் ஆவேசமாக குத்தவும், ரத்தவெள்ளத்தில் சரிந்திருக்கிறார்.

அக்கம்பத்தினர் வந்து பிரதீப்பை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பிரதீப்பின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் கொடைக்கானல் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரமிளாவிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.