“சப்பாத்தி போடும்போதெல்லாம் சமாச்சாரத்துக்கு கூப்பிடுவார்” -ஆறு மாத கர்ப்பமாக அலையும் அனாதை பெண் .

 

“சப்பாத்தி போடும்போதெல்லாம் சமாச்சாரத்துக்கு கூப்பிடுவார்” -ஆறு மாத கர்ப்பமாக அலையும் அனாதை பெண் .


ஒரு அனாதை சிறுமியை கல்யாணம் செய்து கொள்வதாக கூறி அவரை ஆறு மாத கர்ப்பமாக்கிய கொடுமை நடந்துள்ளது .


மஹாராஷ்டிரா மாநிலம் மும்பைக்கு அருகே குராரில் வசிக்கும் ஒரு 16 வயது மைனர் சிறுமி தனது பாட்டியுடன் வசித்து வந்தார் .அவரின் பெற்றோர்கள் இறந்து போனதால் அவருக்கு உறவு என்று சொல்லிக்கொள்ள அந்த பாட்டி மட்டுமே இருந்தார் .அதனால் அந்த பாட்டியுடன் வசித்து வந்த அந்த பெண்ணின் பக்கத்து வீட்டில் ஒரு 73 வயது முதியவர் இருந்தார் .அவருக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள் .
இந்நிலையில் அந்த முதியவரின் குடும்பத்தோடு அந்த பாட்டியும் பேத்தியும் நெருக்கமாக இருந்தார்கள் அதனால் அந்த பாட்டி இறக்கும் தருவாயில் அந்த முதியவரிடம் தங்களின் மகன்களில் ஒருவருக்கு தனது பேத்தியை மணமுடிக்குமாறு கூறினார் .அதனால் அந்த பாட்டி இறந்ததும் அந்த பெண் அந்த முதியவரின் வீட்டிலேயே தங்கினார் .அங்கு சமையல் வேலைகள் மற்றும் வீட்டு உதவிகளை செய்து வந்தார் .அப்போது அந்த வீட்டிலிருந்த அந்த முதியவரின் மகன் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .அதன் காரணமாக அந்த பெண் ஆறு மாத கர்ப்பமாகியுள்ளார் .
அந்த கர்ப்ப விஷயம் அந்த பெண்ணுக்கு தெரியவில்லை. அந்த வீட்டிலிருந்த மற்றவருக்கும் தெரியவில்லை .ஆனால் அந்த பெண்ணுக்கு ஒரு நாள் சிறுநீரக கோளாறு வந்ததும், மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்தார் .அப்போது அந்த பெண்ணை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அந்த பெண் ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பதை கண்டு அதிர்ந்தார்கள் .அதனால் அவர்கள் போலீசுக்கு தெரிவித்தார்கள் .போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பெண்ணிடம் விசாரித்தார்கள் .அப்போது அந்த வீட்டிலிருந்த வாலிபரால் அந்த பெண் கர்ப்பமானது தெரிந்தது .அதன் பிறகு அந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள் .

“சப்பாத்தி போடும்போதெல்லாம் சமாச்சாரத்துக்கு கூப்பிடுவார்” -ஆறு மாத கர்ப்பமாக அலையும் அனாதை பெண் .