15 வயதை பல்லாண்டுகளாக பலாத்காரம் செய்த 75 வயது-பெருகும் பெருசின் ரௌசு ..
குஜராத் பாலியல் குற்றவாளிகளின் புகலிடமாக மாறி வருவதாக தெரிகிறது. அங்கு 75 வயதான ஒரு பெருசால் ,தத்தெடுத்த மைனர் சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.அந்த முகேஷ் என்ற 75 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
குஜராத் பாலியல் குற்றவாளிகளின் புகலிடமாக மாறி வருவதாக தெரிகிறது. அங்கு 75 வயதான ஒரு பெருசால் ,தத்தெடுத்த மைனர் சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.அந்த முகேஷ் என்ற 75 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
மைனர் சிறுமியை மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக 75 வயதான அந்த நபர் ,சூரத் நகரில் உள்ள பெண் காவல் நிலையத்தால் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.
சிறுமியின் தந்தை இறந்த பிறகு, மைனர் சிறுமியும் அவரது தாயும் ஐந்து ஆண்டுகளாக தனியார் பஸ் டிரைவராக பணிபுரியும் முகேஷின் மகன் நிலேஷுடன் வாழத் தொடங்கினர். கைது செய்யப்பட்ட முகேஷின் மகன் நிலேஷும் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் தனது புகாரில் குற்றம் சாட்டியுள்ளார். முகேஷ் மூலம் கர்ப்பமான பின்னர் கர்ப்பத்தை கலைக்க மருந்துகளை வழங்கியதாகவும் அவர் மேலும் குற்றம் சாட்டினார்.
முகேஷால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பின்னர் சிறுமி கர்ப்பமாக இருப்பதை அவரின் மகன் நிலேஷ் அறிந்ததும், அவரும் அவளை ‘கற்பழிக்க’ தொடங்கினார்.இதனால் நிலேஷும் கைது செய்யப்பட்டு அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.