14 வயது சிறுமிக்கு ரூ.200 கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த கராத்தே மாஸ்டர்

 
rape

கராத்தே சொல்லித் தருவதாக கூறி 14 வயது சிறுமிக்கு கடந்த ஒரு வருடமாக பாலியல் தொந்தரவு மற்றும் வன்கொடுமை செய்த கராத்தே மாஸ்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

rape

சென்னை திருமங்கலம் மகளிர் காவல் நிலையத்தில் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கக்கூடிய 14 வயது சிறுமியை காணவில்லை என கடந்த ஒன்றாம் தேதி பெற்றோர்கள் புகார் அளித்திருக்கின்றனர்.பெற்றோர்களுடன் சிறுமியின் கராத்தே மாஸ்டரும் புகார் அளிக்க வந்துள்ளார். மேலும் சிறுமியை கண்டுபிடிக்க வேண்டும் என மிகுந்த ஆர்வம் காட்டியிருக்கிறார். 

இதனிடையே பெற்றோர்கள் புகார் அளித்த சில மணி நேரத்திலேயே சிறுமி வீடு திரும்பி இருக்கிறார். சிறுமியிடம் திருமங்கலம் போலீசார் நடத்திய விசாரணையில், வீட்டின் அருகே இருந்த கோபி என்ற இளைஞருடன் புத்தாண்டை கொண்டாடுவதற்காக மெரினா கடற்கரைக்கு சென்று விட்டு, பின்னர் தனியார் ஹோட்டலில் அறை எடுத்து தங்கியதாகவும் தெரிவித்திருக்கிறார்.

இளைஞருடன் எதற்காக சென்றாய் என்ற போது தான், கராத்தே மாஸ்டரின் பாலியல் சீண்டல்கள் பற்றி தெரிவித்திருக்கிறார். அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் சிறுமி கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டின் அருகே உள்ள கராத்தே பள்ளியில் கராத்தே பயிற்சி எடுத்து வந்திருக்கிறார். 

அந்த பள்ளியை கராத்தே மாஸ்டர் உதய கருணாநிதி( 43) நடத்தி வந்திருக்கிறார். இந்த பள்ளியில் சுமார் 30க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் கராத்தே கற்று வருகின்றனர். கராத்தே பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும்போதெல்லாம் கராத்தே மாஸ்டர் உதயாகருணாநிதி தன்னை கடந்த ஓராண்டுகளாக பாலியல் சீண்டல் மற்றும் வன்கொடுமை செய்து வந்ததாக தெரிவித்திருக்கிறார்.

மேலும் பாலியல் சீண்டல் மற்றும் வன்கொடுமை செய்தவுடன் சிறுமியிடம் 200 ரூபாய் பணம் கொடுத்து இது பற்றி யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டி இருக்கிறார். கராத்தே மாஸ்டரின் பாலியல் தொல்லையிலிருந்து தப்பிப்பதற்காகவே கோபி என்ற இளைஞரிடம் பழகியதாக தெரிவித்திருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த கராத்தே மாஸ்டர் சிறுமியின் நலனில் அக்கறை உள்ளவர் போன்று காவல் நிலையத்தில்  புகார் அளிக்க வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கராத்தே மாஸ்டர் உதய கருணாநிதியிடம் விசாரணை நடத்திய போது அவருக்கு திருமணம் ஆகவில்லை என்பது தெரிந்து வந்திருக்கிறது. மேலும் சிறுமியை பாலில் சீண்டல் மற்றும் வன்கொடுமை செய்ததை ஒப்புக் கொண்டிருக்கிறார். மேலும் சிறுமையை தான் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தெரிவித்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர்.