பாத்ரூமில் 12ம் வகுப்பு மாணவியின் ஆடையை களைந்து வன்கொடுமை!

 
rape

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம்  அருகே இயற்கை உபாதை கழிக்க சென்ற இரண்டாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கேபிள் டிவி ஆபரேட்டர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

81,495 BEST Rape IMAGES, STOCK PHOTOS & VECTORS | Adobe Stock

விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அடுத்த எறையானுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி மகன் ரூபேஷ்ராஜ் (வயது 23). இவர் அந்தப் பகுதியில் கேபிள் டிவி ஆபரேட்டர் ஆக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று எறையானுார் ஊரிலுள்ள பொது கழிப்பிடத்திற்கு சென்ற இவர், அங்கே இருந்த இரண்டாம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமியை யாரும் இல்லாத நேரத்தில் பொது கழிப்பிடத்தில் உள்ள பாத்ரூமுக்கு அழைத்துச் சென்று ஆடைகளை களைந்து பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். அதிர்ச்சி அடைந்த சிறுமி கதவை வேகமாகத் தட்டி கூச்சலிட்டார். அப்போது அந்த பகுதியாக சென்றவர்கள் அங்கு சென்று பார்த்தபோது அந்த சிறுமி ரூபி ஸ்வராஜ் செய்த அக்கிரமங்களை கூறியுள்ளார். 

இதை தட்டிக்கேட்ட சிறுமியின் அக்காவிற்கு ரூபேஷ்ராஜ் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாய் கோட்டகுப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரேவதி சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றார். அதனடிப்படையில் கேபிள் டிவி ஆபரேட்டர் ருபேஷ்ராஜை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து  சிறையில் அடைத்தனர்.