12 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த உதவி தலைமை ஆசிரியர்! கெமிஸ்ட்ரியை வொர்க் அவுட் பண்ண கெமிஸ்ட்ரி சார்!!

 

12 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த உதவி தலைமை ஆசிரியர்! கெமிஸ்ட்ரியை வொர்க் அவுட் பண்ண  கெமிஸ்ட்ரி சார்!!

சேலம் அருகே அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வேதியியல் ஆசிரியர் ஒருவர் 12-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சேலம் அருகே அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வேதியியல் ஆசிரியர் ஒருவர் 12-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இளம்பிள்ளை அருகே உள்ள வேம்படிதாளம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆட்டையாம்பட்டி பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவர் உதவி தலைமை ஆசிரியராக உள்ளார்.  இவர் வேதியியல் ஆசிரியர் என்பதால் மாணவிகளை அடிக்கடி ஆய்வகத்திற்கு அழைத்து செல்வது வழக்கம். இந்த நிலையில், கடந்த ஆண்டு நாமக்கல் மாவட்டம் வெப்படை பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரை ஆய்வுக்கூடத்திற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  மேலும் தொடர்ந்து மாணவியை மிரட்டி பல நாட்கள் அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதை அறிந்த மாணவியின் பெற்றோர் கொண்டலாம்பட்டி காவல் நிலையத்தில் 4 மாதங்களுக்கு முன்பு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில் விசாரணை நடத்திவருகின்றனர். 

இதையடுத்து பாலாஜி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடிய போது, மருத்துவ விடுப்பு எடுத்து விட்டு அவர் தப்பியோடியது தெரிய வந்தது. அவரை பிடிப்பதற்காக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது போல வேறு மாணவிகளையும் ஆசிரியர் பாலாஜி வன்கொடுமை செய்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை முடக்கி விட்டுள்ளனர். இந்த நிலையில் பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியர் பாலாஜி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட மாணவி தற்போது ஐந்து மாத கர்ப்பிணியாக உள்ளார்.