பழனியில் மொட்டையடித்து நேர்த்திக் கடன் செலுத்திய நடராஜன்

 

பழனியில் மொட்டையடித்து நேர்த்திக் கடன் செலுத்திய நடராஜன்

பழனி முருகன் கோவிலில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் மொட்டையடித்து நேர்த்திக் கடன் செலுத்தினார்.

பழனியில் மொட்டையடித்து நேர்த்திக் கடன் செலுத்திய நடராஜன்

தமிழகத்தில் சேலம் சின்னப்பம்பட்டியை சேர்ந்த இளம்வீரர் நடராஜன் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி, டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தபங்கேற்று தனது சிறப்பான பங்களிப்பை அளித்தார். ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் நடராஜன் மொத்தம் 11 விக்கெட்டுகள் வீழ்த்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதை தொடர்ந்து அவருக்கு பாராட்டுகுவிய தொடங்கியது. அத்துடன் சொந்த ஊர் திரும்பிய நடராஜனுக்கு உற்சாக வரவேற்பும் வழங்கப்பட்டது. தாயகம் திரும்பிய நடராஜன், கடின உழைப்பு நிச்சயமாக ஒருவரை உயர்த்தும் என்றும் இனி என்னை போல் உள்ளவர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்கு வர விரும்புவர் என்றும் கூறினார்.

பழனியில் மொட்டையடித்து நேர்த்திக் கடன் செலுத்திய நடராஜன்

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன், பழனி முருகன் கோவிலில் மொட்டையடித்து நேர்த்திக் கடன் செலுத்தியுள்ளார். தைப்பூசத் திருவிழா முடிந்த நிலையில் இன்று பழனி கோயிலுக்கு குடும்பத்துடன் வந்த அவர்,மொட்டையடித்து கொண்டார். இதற்கான புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.