இதுதான் சசிகலாவின் ஆசை! போட்டு உடைத்த சி.ஆர். சரஸ்வதி

 

இதுதான் சசிகலாவின் ஆசை! போட்டு உடைத்த சி.ஆர். சரஸ்வதி

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து வெளியே வந்த சசிகலா, சிறிதுகாலம் சென்னையில் இருந்தார். அதன்பிறகு அரசியலில் இருந்தே ஒதுங்கி இருக்கப்போவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து அவரது சொந்த ஊரான தஞ்சை மாவட்டத்துக்கு சென்று அங்கு தன் குடும்பத்தினருடன் கோவில், திருவிழா என பங்கேற்றுவருகிறார். தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் சாமி தரிசனம் செய்துவருகிறார்.

இதுதான் சசிகலாவின் ஆசை! போட்டு உடைத்த சி.ஆர். சரஸ்வதி

கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் பூவனநாத சுவாமி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்ய சென்ற சசிகலாவை அமமுக செய்தி தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி சந்தித்து பேசினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சி.ஆர்.சரஸ்வதி, மிக விரைவில் சசிகலாவை நோக்கி அதிமுக வரும். அது காலத்தின் கட்டாயம். அனைவரும் சேர்ந்து திமுகவை எதிர்க்க வேண்டும். இதுதான் சசிகலாவின் ஆசை. ஒரு மனிதன் நன்றி உள்ளவனாக இருக்க வேண்டும். ஆனால் நன்றியை மறந்த எடப்பாடி பழனிசாமி இன்று துரோகத்தின் உச்சிக்கு சென்றுவிட்டார். அதற்குரிய பதிலை தமிழக வாக்காளப் பெருமக்கள் கொடுப்பார்கள். அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தான் டிடிவி தினகரனை கோவில்பட்டியில் நிற்க வேண்டுமென ஒருகாலத்தில் ஆசைப்பட்டார். எனவே தான் டிடிவி தினகரன் அங்கு போட்டியிடுகிறார்” எனக் கூறினார்.