“நம்பிக்கை இருக்கிறது… ஸ்டாலின் நிச்சயம் அதை செய்வார்”

 

“நம்பிக்கை இருக்கிறது… ஸ்டாலின் நிச்சயம் அதை செய்வார்”

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது. கூட்டணியில் ஆறு தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி இரண்டில் வெற்றிபெற்றிருக்கிறது. முதல்வராகப் போகும் ஸ்டாலினை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சந்தித்து வாழ்த்து கூறினார்.

“நம்பிக்கை இருக்கிறது… ஸ்டாலின் நிச்சயம் அதை செய்வார்”

அதன்பின், கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழக சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில், மகத்தான வெற்றி பெற்று விரைவில் முதல்வராகப் பொறுப்பேற்க இருக்கிற திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தோம்.

“நம்பிக்கை இருக்கிறது… ஸ்டாலின் நிச்சயம் அதை செய்வார்”

திமுக ஆட்சி அமைகிறபோது, தமிழகம் இன்றைக்கு சிக்கி தவித்துக்கொண்டிருக்கும் கொரோனா கொடுமையை எதிர்த்து ஒரு மகத்தான போராட்டத்தை நடத்தி நிச்சயமாக இந்தக் கொடுமையிலிருந்து மக்களை மீட்கும் காரியத்தில் மு.க.ஸ்டாலின் அரும்பணி ஆற்றுவார் என்ற நம்பிக்கை நிச்சயம் எங்களுக்கு உண்டு” என்றார்.