மதுரை அருகே மாட்டு வியாபாரி, வெட்டிக்கொலை – போலீசார் விசாரணை!

 

மதுரை அருகே மாட்டு வியாபாரி, வெட்டிக்கொலை – போலீசார் விசாரணை!

மதுரை

மதுரை அருகே மாட்டு வியாபாரி மர்மநபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை ஒத்தக்கடை அருகேயுள்ள ஆயிலாங்குடி கிராமத்தை சேர்ந்தவர் அம்மாசி (45). இவர் அந்த பகுதியில் மாடுகளை விற்பனை செய்து வருவதுடன், ஏராளமான ஜல்லிக்கட்டு காளைகளையும் வளர்த்து வந்தார். இந்த நிலையில், கடந்த புதன் கிழமை காலையில் வீட்டில் இருந்து சென்ற அம்மாசி மீண்டும் வீடு திரும்பில்லை என கூறப்படுகிறது.

மதுரை அருகே மாட்டு வியாபாரி, வெட்டிக்கொலை – போலீசார் விசாரணை!

இதனால் அவரது உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்த நிலையில், நேற்று அதிகாலை அயிலாங்குடியில் உள்ள விளை நிலைத்தில் அம்மாசி உடலில் வெட்டுக் காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், ஒத்தக்கடை போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இது குறித்து அம்மாசியின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார், முன் விரோதம் காரணமாக கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.