மேய்ச்சலுக்கு சென்று வெடிகுண்டை கடித்த பசு மாடு..வாயில் படுகாயம் அடைந்த சோகம்!

 

மேய்ச்சலுக்கு சென்று வெடிகுண்டை கடித்த பசு மாடு..வாயில் படுகாயம் அடைந்த சோகம்!

சமீபத்தில் கேரளாவில் உணவு தேடி வந்த யானைக்கு அண்ணாச்சி பழத்தில் வெடிமருந்து கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மேலும், உயிரிழந்த அந்த யானை கர்ப்பிணியாக இருந்தது பிரேதப் பரிசோதனையின் போது தெரிய வந்த நிலையில், அந்த யானை குட்டியின் புகைப்படம் இணைய தளத்தில் வைரல் ஆனது. உயிரிழந்த அந்த குட்டியைப் பார்த்த அனைவரின் மனமும் நிலைக்குலைந்தது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து தற்போது மேய்ச்சலுக்காகச் சென்ற பசு மாடு ஒன்று, நாட்டு வெடிகுண்டைக் கடித்ததால் வாயில் காயமடைந்த சம்பவம் நடந்துள்ளது.

மேய்ச்சலுக்கு சென்று வெடிகுண்டை கடித்த பசு மாடு..வாயில் படுகாயம் அடைந்த சோகம்!

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பஞ்சனி என்னும் பகுதியில் பசு மாடு ஒன்று மேய்ச்சலுக்காக வனப்பகுதிக்குச் சென்றுள்ளது. அப்போது அங்கு இருந்த வெடிகுண்டைக் கடித்ததால் அதன் வாய் பகுதி சிதைந்துள்ளது. மேய்ச்சலுக்குச் சென்றுவிட்டு வாயில் ரத்தத்துடன் வீடு திரும்பிய அந்த மாட்டைக் கண்டு அதிர்ச்சி அடைந்த உரிமையாளர்,காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், மேய்ச்சலுக்கு சென்ற போது வெடிகுண்டைக் கடித்ததால் அதன் வாய் பகுதி கிழிந்து விட்டதாகவும், இந்த செயலில் ஈடுபட்ட நபர்களை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.