அசுர வேகம் காட்டும் கொரோனா : பலி எண்ணிக்கை 3லட்சத்து 34ஆயிரத்து 92 ஆக உயர்வு!
May 22, 2020, 08:00 IST1590114619000
கொரோனா வைரஸ் தற்போது 200ற்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இந்த ஆபத்தான நோய் தொற்றிலிருந்து தப்பிக்க அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இதுவரை உலகம் முழுவதும் 51 லட்சத்து 89ஆயிரத்து 488 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் மே 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், உலக அளவில் கொரோனா வைரசால் பலியானோர் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது. இதுவரை 3லட்சத்து 34ஆயிரத்து 92 பேர் பலியாகி உள்ளனர்