கொரானா குணமான பெண்கள் -ஆம்புலன்ஸ் கொடுக்காத ஹாஸ்ப்பிட்டல் -நடந்து சென்ற போது நடந்த கொடுமை

 

கொரானா குணமான பெண்கள் -ஆம்புலன்ஸ் கொடுக்காத ஹாஸ்ப்பிட்டல் -நடந்து சென்ற போது நடந்த கொடுமை


கொரானா சிகிச்சை முடிந்து நடந்து சென்ற பெண்ணை இரு ரௌடிகள் கடத்தி பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது

கொரானா குணமான பெண்கள் -ஆம்புலன்ஸ் கொடுக்காத ஹாஸ்ப்பிட்டல் -நடந்து சென்ற போது நடந்த கொடுமை


அசாமின் சரைடியோ மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் கடந்த வாரம் ஒரு தாயும் அவரின் மகளும் கொரானா பாசிடிவ் வந்ததால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர் .பின்னர் ஒரு வாரம் சிகிச்சைக்கு பின் இருவருக்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு கொரானா நெகடிவ் என்று ரிசல்ட் வந்தது .அதனால் அவர்களை டாக்டர்கள் நள்ளிரவு இரண்டு மணிக்கு டிஸ்சார்ஜ் செய்து வீட்டுக்கு போக சொன்னார்கள் .அதனால் இருவரும் தங்களை ஆம்புலன்சில் 25 கிலோமீட்டர் தள்ளியிருக்கும் தங்களின் வீட்டில் விடுமாறு கேட்டனர் .ஆனால் அந்த மருத்துவமனையில் ஊழியர்கள் இல்லாததால் ஆம்புலன்ஸ் வராது என்று கூறி விட்டனர் .அதனால் அந்த தாயும் மகளும் நடந்தே தங்களின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர் .
அப்போது அந்த பெண்களை பார்த்த இரண்டு ரௌடிகள் அந்த பெண்களை பிடித்து இழுத்து சென்றனர் .அப்போது அவரின் மகள் மட்டும் அவர்களிடமிருந்து தப்பியோடி விட்டார் .ஆனால் அவரின் தாயார் அவர்களிடம் சிக்கி கொண்டார் .அதன் பிறகு அவர்கள் அந்த பெண்ணை அங்குள்ள ஒரு தோட்டத்தில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து விட்டு ஓடிவிட்டனர் .பின்னர் அங்கிருந்து தப்பித்த அந்த பெண்ணின் மகள் ஊர் மக்களை கூட்டி வந்து அவரின் தாயாரை அங்கிருந்து கூட்டி சென்றார் .பிறகு அவர்கள் பொலிசில் புகார் கூறினர் .போலீசார் வழக்கு பதிந்து அந்த ரௌடிகளை தேடி வருகின்றனர்