கோவை சிஎஸ்ஐ பள்ளியில் தடையை மீறி நுழைவுத்தேர்வு நடத்தியதால் சீல்!

 

கோவை சிஎஸ்ஐ பள்ளியில் தடையை மீறி நுழைவுத்தேர்வு நடத்தியதால் சீல்!

கோவை வெரைட்டி ஹால் பகுதியில் இயங்கி வரும் சி.எஸ்.ஐ மேல்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்புக்கு, நுழைவு தேர்வு நடத்தியதால் அந்த பள்ளிக்கு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சீல் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

கோவை சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பில் சேர மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு இரு தினங்களாக நடத்தப்பட்டுள்ளது. தினமும் 10 முதல் 15 மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வந்த்தாக கூறப்படுகின்றது. இந்நிலையில் பள்ளியில் நுழைவு தேர்வு நடப்பது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு பிரேம் என்பவர் புகைப்படம் மற்றும், வீடியோ ஆதாரங்களுடன் புகார் அளித்தார். இதனையடுத்து உடனடியாக பள்ளி நிர்வாகம் தேர்வு எழுத வந்த சிறுவர்களையும் அவர்களின் பெற்றோரையும் பள்ளியில் இருந்து வெளியே அனுப்பியது.

கோவை சிஎஸ்ஐ பள்ளியில் தடையை மீறி நுழைவுத்தேர்வு நடத்தியதால் சீல்!

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உஷா மற்றும் தெற்கு வட்டாட்சியர் அருள்முருகன் ஆகியோர் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டனர். பள்ளி முதல்வர் மெர்சி மெட்டில்டா அறையில் விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் பள்ளி வளாகத்தை முழுமையாக ஆய்வு செய்தனர். நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டதை கண்டறிந்த அதிகாரிகள் பள்ளி முதல்வர் அறை, நுழைவுத்தேர்வு நடத்திய பகுதி என அனைத்தையும் மூடி ல் வைத்தனர். நுழைவுத் தேர்வு நடத்தியது தொடர்பாக பள்ளி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டு இருப்பதாகவும், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா தெரிவித்தார்.