மின்கம்பம் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், தம்பதி பலி!

 

மின்கம்பம் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், தம்பதி பலி!

ஈரோடு

பெருந்துறை அருகே மின்கம்பம் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தம்பதியினர் உயிரிழந்தனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்துள்ள கருமாண்டி செல்லிபாளையம் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (71). இவரது மனைவி சாந்தாமணி. இவர்கள் நேற்று காஞ்சிகோவில் அருகே உள்ள உறவினரின் வீட்டிற்கு சென்று விட்டு, இருசக்கர வாகனத்தில் திரும்பி கொண்டிருந்தனர்.

மின்கம்பம் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில், தம்பதி பலி!

காஞ்சிகோவில் – பெருந்துறை சாலை பிரிவு அருகே வந்தபோது, இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மின் கம்பத்தின் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த சின்னசாமி மற்றும் அவரது மனைவி சிந்தாமணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவலின் பேரில் காஞ்சிகோவில் போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.