ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே மின்சாரம் தாக்கி, தம்பதி உயிரிழப்பு!

 

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே மின்சாரம் தாக்கி, தம்பதி உயிரிழப்பு!

விருதுநகர்

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே வீட்டில் துணி காயவைத்தபோது மின்சாரம் தாக்கி தம்பதி பரிதாபமாக உயிரிழந்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் அடுத்த கோட்டைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி. கூலி தொழிலாளி ஆன இவருக்கு பாப்பாள் என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலயில், பாப்பம்மாள் நேற்றிரவு துவைத்த துணிகளை வீட்டின் பின் பகுதியில் உள்ள கொடி கயிற்றில் காய வைக்க சென்றார்.

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே மின்சாரம் தாக்கி, தம்பதி உயிரிழப்பு!

கொடி கயிற்றின் அருகே சென்ற மின்சார ஒயரின் மீது எதிர்பாராத விதமாக ஈரத்துணி பட்டுள்ளது. இதில் மின்சாரம் பாய்ந்ததில் பாப்பாள் அலறி துடித்தார். இதனை கண்டு, அவரை மீட்க முயன்ற பாண்டியையும் மின்சாரம் தாக்கியது. அருகில் இருந்தவர்கள் உடடினயாக மின் இணைப்பை துண்டித்து, இருவரையும் மீட்டனர்.

அப்போது, பாப்பாள் மற்றும் பாண்டி உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. இதுகுறித்து அந்த பகுதி மக்கள் தகவலின் பேரில் ஶ்ரீவில்லிபுத்தூர் போலீசார், உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.