திருமணமான 2 மாதத்தில் தம்பதி அடுத்தடுத்து தற்கொலை – கோட்டாட்சியர் விசாரணை

 

திருமணமான 2 மாதத்தில் தம்பதி அடுத்தடுத்து தற்கொலை – கோட்டாட்சியர் விசாரணை

திருச்சி

திருச்சியில் காதல் திருமணம் செய்த தம்பதி அடுத்தடுத்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி திருவானைக்கோவில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சத்யகிரி(26). கூலி தொழிலாளி. இவர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு அனிதா(19) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சத்யகிரிக்கு மதுப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், கணவன் – மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

திருமணமான 2 மாதத்தில் தம்பதி அடுத்தடுத்து தற்கொலை – கோட்டாட்சியர் விசாரணை

இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், வாழ்வில் விரக்தியடைந்த சத்யகிரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சியடைந்த அனிதா, தானும் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபாத்தான நிலையில் இருந்த அவரை, உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று அனிதா பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து ஶ்ரீரங்கம் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், திருமணமாகி 2 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதால், ஶ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.