விவசாயி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு – போலீசார் விசாரணை

 

விவசாயி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு – போலீசார் விசாரணை

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே கள்ளக்காதலை கண்டித்த விவசாயி வீட்டில், நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அடுத்த எல்லபட்டி கிராமத்தை சேர்ந்தவர் நாகமுத்துகுமார். இவருக்கு நித்தியா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், நித்தியாவுக்கும், அதே ஊரை சேர்ந்த பிரபுகுமார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால், இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்த வந்ததாக கூறப்படுகிறது.

விவசாயி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு – போலீசார் விசாரணை

இதனை அறிந்த நித்யாவின் கணவர் நாகமுத்துக்குமார், கடந்த வாரம் பிரபுகுமாருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், நித்யாவின் உறவினர் முருகேசன், பிரபு குமாரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் மனமுடைந்த பிரபுக்குமார், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டார். பிரபுகுமாரின் மரணத்தால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள், இன்று அதிகாலை நித்தியாவின் உறவினர் முருகேசன் வீட்டின் ஜன்னலிலும், இருசக்கர வாகனத்திலும் நாட்டு வெடிகுண்டை வீசிவிட்டு தப்பியோடினர்.

விவசாயி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீச்சு – போலீசார் விசாரணை

இதில், வீட்டின் ஜன்னல் பகுதி சேதமடைந்த நிலையில், மற்றொரு நாட்டு வெடிகுண்டு வெடிக்காததால் முருகேசன் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சாணார்பட்டி போலீசார், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் மேக்ஸ் வரவழைத்து தடயங்களை சேகரித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய நபர்களை தேடி வருகின்றனர்.