தமிழகத்தில் ஒரே நாளில் 241 பேர் உயிரிழப்பு! இன்றைய பாதிப்பு நிலவரம்

 

தமிழகத்தில் ஒரே நாளில் 241 பேர் உயிரிழப்பு! இன்றைய பாதிப்பு நிலவரம்

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 2கோடியே 19லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 2 லட்சத்து 38ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ்.

தமிழகத்தில் ஒரே நாளில் 241 பேர் உயிரிழப்பு! இன்றைய பாதிப்பு நிலவரம்

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 27,397பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 லட்சத்து 51ஆயிரத்து 362ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 1,39,401ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 267பரிசோதனை மையங்கள் உள்ளன. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 16,101 பேர் ஆண்கள், 11,296 பேர் பெண்கள். சென்னையில் ஒரேநாளில் 6,846பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் 72 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் ஒரே நாளில் 241 பேர் உயிரிழப்பு! இன்றைய பாதிப்பு நிலவரம்

இன்று 241பேர் உயிரிழந்துள்ளார். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 15,412 ஆக அதிகரித்துள்ளது. இன்று 23,110 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,96,549ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.