தமிழகத்தில் ஒரேநாளில் 24,898பேருக்கு கொரோனா தொற்று – 195 பேர் உயிரிழப்பு

 

தமிழகத்தில் ஒரேநாளில் 24,898பேருக்கு கொரோனா தொற்று – 195 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 2கோடியே 11 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 2 லட்சத்து 30ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ்.

தமிழகத்தில் ஒரேநாளில் 24,898பேருக்கு கொரோனா தொற்று – 195 பேர் உயிரிழப்பு

இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 24,898 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 லட்சத்து 97ஆயிரத்து 500ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 1,31,468ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் 266பரிசோதனை மையங்கள் உள்ளன. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 14,683 பேர் ஆண்கள், 10,215 பேர் பெண்கள். சென்னையில் ஒரேநாளில் 6,678 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில் 67பேர் உயிரிழந்துள்ளனர்

தமிழகத்தில் ஒரேநாளில் 24,898பேருக்கு கொரோனா தொற்று – 195 பேர் உயிரிழப்பு

இன்று195 பேர் உயிரிழந்துள்ளார். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,974 ஆக அதிகரித்துள்ளது. இன்று 21,546 2பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,51,058ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.