தமிழகத்தில் இன்று ஒரேநாளில் 113 பேர் கொரோனாவுக்கு பலி!
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 1கோடியே 88 லட்சத்துக்கும் மேல் அதிகரித்துள்ளது. 2 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை உயிரிழக்க செய்துள்ளது இந்த கொடிய வகை வைரஸ்.
இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்தவர்கள் உட்பட 18,692பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11 லட்சத்து 66ஆயிரத்து 756ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்றுவருவோரின் எண்ணிக்கை 1,15,128ஆக அதிகரித்துள்ளது. இன்று பாதிக்கப்பட்டவர்களில் 11,439பேர் ஆண்கள், 7,253பேர் பெண்கள். தமிழகத்தில் 265 பரிசோதனை மையங்கள் உள்ளன.
இன்று 113பேர் உயிரிழந்துள்ளார். 52 பேர் தனியார் மருத்துவமனைகளிலும், 61பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்தனர். இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 14,046ஆக அதிகரித்துள்ளது. இன்று 16,007பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,37,582ஆக அதிகரித்துள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது