இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,58,333 ஆக உயர்வு!
May 28, 2020, 09:28 IST1590638326000
இதுவரை உலகம் முழுவதும் 57 லட்சத்து 88 ஆயிரத்து 782 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் கொரோனா வைரசால் 3 லட்சத்து 57ஆயிரத்து 425 பேர் பலியாகி உள்ளனர் . மேலும் 24லட்சத்து 97 ஆயிரத்து 593 பேர் குணமாகியுள்ளனர்.
இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் மே 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 1,51,767லிருந்து 1,58,333 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 67,692 பேர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,531 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.