சென்னையில் 93,537 பேருக்கு கொரோனா! மாவட்ட வாரியான ரிப்போர்ட்!!

 

சென்னையில் 93,537 பேருக்கு கொரோனா! மாவட்ட வாரியான ரிப்போர்ட்!!

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இன்று புதிதாக 6,988 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கும் நிலையில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலானோர் கோயம்பேடு சந்தைக்கு சென்றுவிட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு பயணித்தவர்கள் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் விவரத்தை மாவட்டரீதியாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. அதில் சென்னையிலேயே கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது.

சென்னையில் 93,537 பேருக்கு கொரோனா! மாவட்ட வாரியான ரிப்போர்ட்!!

சென்னையில் 93,537 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கோவையில் 3,237 பேருக்கும் திண்டுக்கல்லில் 2,115 பேருக்கும் திருநெல்வேலியில் 3,595 பேருக்கும், ஈரோட்டில் 586, திருச்சியில் 3,289 பேருக்கும், நாமக்கல் 510 மற்றும் ராணிப்பேட்டை 3,467, செங்கல்பட்டு 11,764 மதுரை 9,595, கரூர் 352, தேனி 3,556 மற்றும் திருவள்ளூரில் 11,395 பேருக்கு, தூத்துக்குடியில் 5,291, விழுப்புரத்தில் 2,923 பேருக்கும், கிருஷ்ணகிரியில் 664 பேருக்கும், திருவண்ணாமலையில் 4,933 தருமபுரியில் 570 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 93,537 பேருக்கு கொரோனா! மாவட்ட வாரியான ரிப்போர்ட்!!

இதேபோல் திருப்பூரில் 668, கடலூர் 2,250, மற்றும் சேலத்தில் 2,845, திருவாரூரில் 1,256, நாகப்பட்டினம் 533, திருப்பத்தூர் 864, கன்னியாகுமரியில் 3,393 மற்றும் காஞ்சிபுரத்தில் 6,796 பேருக்கும், சிவகங்கை 1,991 மற்றும் வேலூரில் 4,854 பேருக்கும், நீலகிரியில் 661 பேருக்கும், தென்காசி 1,607 கள்ளக்குறிச்சியில் 2,938 பேருக்கும், தஞ்சையில் 1,892, விருதுநகரில் 5,573, ராமநாதபுரத்தில் 2,951 பேருக்கும், அரியலூர் 800 மற்றும் பெரம்பலூரில் 296 பேருக்கும், புதுக்கோட்டையில் 1,504 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி வெளிநாடு மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து தமிழகம் வந்த 1,686பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.