கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.76 லட்சத்தை தாண்டியது… பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது…

 

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.76 லட்சத்தை தாண்டியது… பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது…

நம் நாட்டில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரிசோதனை நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. இருப்பினும் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருந்து வந்தது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.76 லட்சத்தை தாண்டியது… பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது…

இந்நிலையில் நேற்று நம் நாட்டில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. நேற்று மட்டும் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் புதிதாக 8,026 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,76,823ஆக உயர்ந்தது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.76 லட்சத்தை தாண்டியது… பலி எண்ணிக்கை 5 ஆயிரத்தை கடந்தது…

கொரோனா வைரஸ் பாதிப்பு 1.50 லட்சத்தை தொட்ட அடுத்த 3 தினங்களில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.76 லட்சத்தை தாண்டி இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நேற்று மட்டும் நாடு முழுவதுமாக கொரோனா வைரசுக்கு 200 பேர் இறந்துள்ளனர். இது இதுவரையிலான காலத்தில் ஒரே நாளில் அதிக உயிர் இழப்பு ஏற்பட்ட இரண்டாவது அதிகபட்ச அளவாகும்.