இரண்டரை கோடியை நெருங்கும் கொரோனா பாதிப்பு #CoronaUpdates

 

இரண்டரை கோடியை நெருங்கும் கொரோனா பாதிப்பு #CoronaUpdates

 கொரோனா வைரஸ் கடந்த 9 மாதங்களாக உலகையே துன்புறுத்தி வருகிறது. வல்லரசு நாடுகளே நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகின்றன.

ரஷ்யா உலகின் முதல் கொரோனா தடுப்பூசியைக் கண்டறிந்தாலும் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தால் மட்டுமே நோய்ப் பரவல் குறையும்.

இரண்டரை கோடியை நெருங்கும் கொரோனா பாதிப்பு #CoronaUpdates

இன்றைய (ஆகஸ்ட் 25) காலை நிலவரப்படி,  உலகளவில் கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு, குணம் அடைந்தவர்கள், மரணம் அடைந்தவர்கள் உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம்.

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 38 லட்சத்து  11 ஆயிரத்து 693 பேர். ஆகஸ்ட் 10-ம் தேதிதான் 2 கோடியைக் கடந்திருந்தது. இரு வாரங்களில் 38 லட்சம் அதிகரித்து விட்டது.

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 1 கோடியே 63 லட்சத்து 47 ஆயிரத்து 833 நபர்கள்.

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 8 லட்சத்து 16 ஆயிரத்து 534 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.  

இரண்டரை கோடியை நெருங்கும் கொரோனா பாதிப்பு #CoronaUpdates

தற்போது சிகிச்சை எடுத்துக்கொண்டிப்போர்களில் 99 சதவிதத்தினர்  லேசான அறிகுறிகளோடு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதம் இருக்கு 1 சதவிகிதத்தினருக்கு தீவிர சிகிச்சை அளிக்கும் நிலை இருக்கிறது.

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது  அமெரிக்காவில் 59,14,682 பேரும், பிரேசில் நாட்டில் 36,27,217  பேரும் கொரோனவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

இது இன்றைய நிலவரம், நேற்றைய நிலவரத்தின் அப்டேட்டில் பார்க்கும்போது, புதிய நோயாளிகள் அதிகரித்திருப்பது உலகளவில் இந்தியாவில்தான் என்கிற அதிர்ச்சி தகவல் தெரிகிறது.