வேலூரில் 5 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு !

 

வேலூரில் 5 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு !

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட6,988 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,06,737 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 89 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

வேலூரில் 5 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு !

இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை3,409 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 93,537பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

வேலூரில் 5 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு !

இந்நிலையில் வேலூரில் மேலும் 204 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு மொத்த பாதிப்பு 5156 ஆக உயர்ந்துள்ளது. இங்கு இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளனர்.