கொரோனா தடுப்பூசி – சென்னை மாநகராட்சி சாதனை!

 

கொரோனா தடுப்பூசி – சென்னை மாநகராட்சி சாதனை!

கொரோனா தடுப்பூசி போடும் பணியில் சென்னை மாநகராட்சி புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.

கொரோனா தடுப்பூசி – சென்னை மாநகராட்சி சாதனை!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டது. முதலில் முன்கள பணியாளர்கள் சுமார் 5 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது . இதைத் தொடர்ந்து 45 வயதிற்கு மேற்பட்டோர் ,முதியவர்கள், 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 81 லட்சத்து 40 ஆயிரத்து 164 மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர்.அத்துடன் நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 23 ஆயிரத்து 915 பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கொரோனா தடுப்பூசி – சென்னை மாநகராட்சி சாதனை!

இந்நிலையில் நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்திய பெருநகரங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டோர் 55 சதவீதம் பேருக்கு தடுப்பூசி செலுத்தி சென்னை மாநகராட்சி சாதனை புரிந்தது.